search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drugs sale"

    வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட ஹுக்கா என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கிண்டி போலீசார் நேற்று இரவு கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    வேளச்சேரி செக்போஸ்ட் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தியபோது அங்கு தடை செய்யப்பட்ட ஹுக்கா என்ற போதைப் பொருளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து ஓட்டல் ஊழியர்களான சவுகார் பேட்டையை சேர்ந்த மோகித் (வயது 25), பஜன்லால் (27), மற்றொரு பஜன்லால் (24), சந்தீப் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×