search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly molested"

    • தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார்.
    • ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.

    கிராமத்தில் மைனர் போல சுற்றித்திரிந்த இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்திருந்தார்.

    அங்கு வந்த சிவக்குமார் மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து திடீரென மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அறை கதவை பூட்டினார்.

    மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.

    காலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராமத்தில் உள்ள 6 பெண்களை சிவக்குமார் ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது மூதாட்டி என்று கூட பார்க்காமல் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.
    • போலீசார் ராகேசை கைது செய்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹபீஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது35). அதே பகுதியில் கணவர், மகனை இழந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மதியம் ராகேஷ் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் உறவுக்கார பெண் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் இதைப்பார்த்ததும் சத்தம் போட்டார். உடனே ராகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராகேசை கைது செய்தனர்.

    ×