search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Fund"

    தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி திரட்டுவதில் துரைமுருகன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முதல்கட்டமாக துரைமுருகன் தனது சொந்த மாவட்டமான வேலூரில் தேர்தல் நிதியை திரட்டும் பணியை தொடங்கி வைத்துள்ளார். #DuraiMurugan #DMK
    சென்னை:

    தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் சமீபத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    தேர்வு செய்யப்பட்ட அன்றே “தி.மு.க.வுக்கு அதிக நிதி சேர்க்க வேண்டும். அதற்கு தி.மு.க.வினர் முன் வரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். தற்போது தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    இதையடுத்து, தேர்தல் நிதி திரட்டுவதில் துரைமுருகன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மாவட்ட கழகங்கள் சார்பில் தேர்தல் நிதி திரட்டும் பணியை தொடங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



    தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் பதவி ஏற்ற பிறகு நேற்று ரெயில் மூலம் வேலூர் சென்றார். அவருக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு விழாவில் வேலூர் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்கள் சார்பிலும், வேலூர் நகர தி.மு..க சார்பிலும் முதல் கட்டமாக ரூ.1 கோடி தேர்தல் நிதி துரைமுருகனிடம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர்கள் காந்தி எம்.எல்.ஏ., நந்தகுமார் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் கட்டமாக துரைமுருகன் தனது சொந்த மாவட்டமான வேலூரில் தேர்தல் நிதியை திரட்டும் பணியை தொடங்கி வைத்துள்ளார். இதுபோல மற்ற மாவட்டகளிலும் தேர்தல் நிதியை தி.மு.க. திரட்டி வருகிறது.

    இதுவரை திரட்டப்பட்ட தேர்தல் நிதியை விட இந்த முறை அதிக நிதியை திரட்ட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தை மற்றொரு மாவட்டம் மிஞ்ச வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். என்று தி.மு.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். #DuraiMurugan #DMK
    ×