என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity"

    • மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.
    • வயலுக்கு சென்ற சுப்பிரமணியன் அதை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன்.

    கடந்த சில தினங்களாக மன்னார்குடி சுற்றுவட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுப்ரமணியன் தனது வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக சென்றுள்ளார்.

    அப்போது வயல் அருகே சென்ற மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.

    சுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வந்து சுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் பரவாக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகம்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் 33/11 கேவி துணை மின் நிலையம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்படி துணை மின் நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடு துறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர்.

    தற்போது செம்பனார்–கோயில் பிரிவிற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மேமாத்தூர் ஊராட்சி தலைவர் தெட்ஷிணாமூர்த்தி, மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.
    • இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.

    நகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன் மக்களோடு கலந்துரையாடி மக்களின் குறைகளை கேட்டார்.

    இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் மோகன் குமார், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தெருவிளக்குகளை திடீர் நகர் பகுதி மக்களிடம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியின் போது மகேஸ் ரெட்டி ரஞ்சித், மாநில பட்டியல் அணி துணைத்தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், ராஜேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, காமாட்சி சிறப்பு அழைப்பாளர் குணாளன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
    • நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை

    திருப்பூர் : 

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
    • 11 மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைக்கும் பணி.

    சீர்காழி:

    சீர்காழி வட்டத்தில் கடந்த 11ஆம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.

    ஜீவா நகரில் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் அங்குள்ள வர்கள் அவதி அடைந்து வந்தனர்.

    வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொ ண்டு வந்தார்.

    அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து பழமையான மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்பேரில் ஒரே நாளில் புதன்கிழமை ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.

    மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக 5 மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
    • அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.

    கடலூர் :

    வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.

    அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

    • கீழக்கரை, உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி) மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    கீழக்கரை மற்றும் வள்ளல் சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்கு வெட்டி, தெரு இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன்மார்கெட், பைத்துமால், அலவாய்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம்.

    இடிந்தல்கல்புதிர், கிழக்கு தெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா தர்கா பகுதி, பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உப்பட்ட பகுதிகளான 500 பிளாட்.

    மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம் விவேகானந்தபுரம், உத்திரகோசமங்கை பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    • வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி மின்சார வாரிய செயற்பொ றியாளர் லதா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை 29-ம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
    • நேற்று இரவு இவர் மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.

    காளிமுத்து சின்ன உலகாணி கிரா மத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

    அப்ேபாது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).

    லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.

    பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது.
    • இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்த அகில இந்திய, மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்த அகில இந்திய, மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விரைவில் பதவி ஏற்று கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவது.

    புதிய நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க முகாம்கள் நடத்துவது. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சியால் புதுவை மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் பால் விலையை உயர்த்தியது. ஏழை மக்களின் அன்றாட நடவடிக்கையை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதோடு ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரை செய்துள்ளது.

    இது ஏழை மக்களை கடும் துன்பத்திற்கு உள்ளாக்கும். எனவே, அரசு பால் விலை உயர்வை திரும்ப பெற்று, மின் கட்டணத்தை உயர்த்துவதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். இல்லையெனில் கட்சி தலைமையின் அனுமதியோடு போராட்டம் நடத்துவது.

    விலைவாசி உயர்வால் ஏற்கனவே புதுவை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் பிரிபெய்டு மின் கட்டண திட்டத்தை அமுல்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமையும். எனவே, பிரிபெய்டு மின் கட்டண திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×