search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity cut off"

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரை இறங்க சாட்னா பகுதியில் உள்ள 20 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. #RajnathSingh

    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மத்திய பிரதேச மாநிலம் சாட்னா பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். சிலை திறப்பு விழாவுக்காக அவர் அங்கு சென்றார்.

    ராஜ்நாத் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரை இறங்க சாட்னா பகுதியில் உள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் இரண்டு உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்வதால் மாவட்ட நிர்வாகம் மின்சாரத்தை துண்டித்தன.

    நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை 3 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் 20 கிராமங்களும் இருளில் தத்தளித்தன.

    இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது “மின்சாரம், தண்ணீர் இல்லாமல் கிராமத்தை சேர்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை” என்றார்.

    12 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மின்சார அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். #RajnathSingh

    ×