என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity"

    • உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
    • உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.

    திருவாரூர்:

    கொரடாச்சேரி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் உமாப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்களை உதவியாளர் மகேந்திரன் வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது. நாகூரான் (அதிமுக): மேல மற்றும் கீழ உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.

    சத்தியேந்திரன் (திமுக): எண்கண் ஊராட்சியில் ஈமகிரியை கட்டிடம் வேண்டும்.

    ஏசுராஜ் (அதிமுக): தியாகராஜபுரம் ஆதி திராவிடர் தெரு சாலை, நீலக்குடி சுடுகாடு மயான கொட்டகை, மயானம் செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

    உமாமகேஸ்வரி (திமுக): தியாகராஜபுரம் ஊராட்சி சிராய்குடி மயான சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள குடிநீர் தொட்டிக்கு மூடி இல்லாமல் உள்ளது உடனே சீரமைக்க வேண்டும்.

    ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பாலச்சந்திரன்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் மற்ற பணிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இதைத்தொடர்ந்து தலைவர் உமாப்பிரியா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், கோடை காலம் வருவதால் மக்களின் அடிப்படையாக குடி நீர், மின்சாரம், தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படித்துறை மற்றும் வாய்க்கால் மதகுகளை ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடித்து விட வேண்டும்.

    மேலும் படித்துறை, கல்வெட்டு, தேவைப்படும் உறுப்பினர்கள் உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன் நன்றி கூறினார்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    தஞ்சாவூர் பூதலூர் காங்கேயர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 70). இவர், வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து முத்துகிருஷ்ணனின் மகன் செந்தில்குமார் (43) பூதலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டம் நடந்தது.
    • கேங்மேன் பணியாளர்களை கள பணி உதவியாளராக நியமிக்க வேண்டும்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் மண்டல பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சசாங்கன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, வரதராஜன், ஜேம்ஸ் கென்னடி முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுசெயலாளர் பாரி சிறப்புரையாற்றினார். ஒப்பந்ததொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள பணி உதவியாளராக நியமிக்க வேண்டும். தரம் உயர்ந்த மற்றும் புதிய துணை மின்நிலையங்களில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகி வசந்த்குமார், அய்யர்தேவர், அந்தோணி மற்றும் ஜனதா தளம் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, ஜெயபிரகாசம், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார்.
    • ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகையன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால், மின் வயர் திருட்டு தொடர்பாக புகார் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் முருகையன் புகார் அளித்தார்.

    • ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் .

    மங்கலம் :

    விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

    இந்த அறிவிப்பு குறித்து மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் -கூறுகையில்

    தமிழகத்தில் மார்ச்1-ந்தேதி முதல் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் விசைத்தறிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டு ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்/ மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தியும் ,கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பதை 300 ஆக உயர்த்தியும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி , செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும்திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் மா.சிவசாமி கூறுகையில்,இதன் மூலம் விசைத்தறித் தொழில் நல்ல நிலையில் சீரடைந்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
    • மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது,

    நாங்கள் வாழப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். நான், என்னுடன் தங்கை மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் கல்லூரியில் படித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகத்தில் மனு அளித்திருந்தோம்.

    இந்த நிலையில் மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு, மின் இணைப்பு வழங்க விடாமல் மிரட்டி வரும் தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது..இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார்.
    • பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள எர்த் கம்பியில் ஒரு சில நேரங்களில் மின்சாரம் வரும். இந்நிலையில் லாரி கிளினரான சந்திரன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தனது வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது. 

     இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி பலியான கிளினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலைகரும்புதோட்டத்தில் களை எடுப்ப தற்காக விஜயா (50), சரோஜா (70) ஆகியோர் சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது.
    • இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருேக மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இதில் களை எடுப்ப தற்காக அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மனைவி விஜயா (50), ராஜகோபால் மனைவி சரோஜா (70) ஆகியோர் இன்று காலை சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி  திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சரோஜா மற்றும் விஜயாவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து புதுப்பேட்ைட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.    களை எடுக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவலனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    • விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ராம்குமார் (வயது23). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் அருப்புக்கோ ட்டையில் உள்ள நெல்பேட்டையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தான் பணிபுரிந்த இடத்தில் ராம்குமார் குப்பைகளை அகற்ற பரண் மேல் ஏறியுள்ளார். அப்போது அங்குள்ள மின்வயரை தொட்டதில் ராம்குமார் மின்சாரம் தாக்கி மயங்கினார்.

    குப்பைகளை அகற்ற மேலே ஏறியவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சென்று பார்த்த போது ராம்குமாரை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களி டையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் கீழ கோபுர வாசல் அருகில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    வித்யாதேவி சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்) :-

    எனது பகுதியில் உள்ள குளத்தில் படித்துறை அமைத்து தர வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக) :-

    எனது பகுதியில் மயான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். புதிதாக ரேஷன் கடையை கட்டி தர வேண்டும் என்றார்.

    சியாமளாதேவி (திமுக) :-

    கோடை காலமாக இருப்பதால் எனது வார்டு பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    கென்னடி (திமுக):-

    வரும் காலம் கோடை காலமாக இருப்பதால் அனைத்து வாடுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    துணைத் தலைவர் :-

    2.0 திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் முகூர்த்த அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து தடை யை தவிர்க்கும் வகையில் மாற்றாக ஒரு வழிப்பாதை அமைப்பதற்கு இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனத்திற்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    தலைவர்:-

    உறுப்பின ர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப சரி செய்யப்படும்.

    குறிப்பாக குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் உடனுக்கு டன் நிறைவேற்றப்படும்.

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அரசிடம் கூடுதல் நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதற்கு மன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.

    • மன்னார்குடி பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • அறுந்து கிடந்த மின்கம்பியை மாதவன் மதித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 27).

    நேற்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் மழை பெய்த போது வீட்டில் இருந்த மாதவன், மழை விட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.

    இதை கவனிக்காத மாதவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.

    அப்போது மாதவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45 ) விவசாயி. இவர் புதிய வீடு ஒன்று கட்டி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் கட்டுமான பணிக்காக கீழ் தளத்தில் கடப்பாரையால் பள்ளம் தோண்டி கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயர் மீது கடப்பாரை பட்டது.

    இதில் மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

    ×