என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Elephant found dead mysteriously"
- அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது.
- தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்திற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண் யானை குட்டி மர்மமாக இறந்து கிடந்ததால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டம் சுருளி அருவி, மணலாறு, இரவங்க லாறு, வெண்ணியாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தேக்கடி வனப்பகுதியில் இருந்து மேகமலை வனப்பகுதிக்கு யானைகள் வந்துபோவது அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக கம்பத்திற்கு அரிசி கொம்பன் யானை வந்து சென்றபிறகு இதுபோன்ற யானைகள் நடமாட்டம் அதிகரித்து ள்ளது.
இந்நிலையில் இரவங்க லாறு அணையின் கரையை யொட்டி ஆண் யானை க்குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறை யினருக்கு தோட்ட தொழி லாளர்கள் தகவல் அளித்தனர்.
அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது. இதனை யடுத்து கால்நடை பரா மரிப்புத்துறை டாக்டர் தலைமையில் அங்கு வந்த குழுவினர் யானை குட்டியி ன் உடலை பிரேத பரிசோ தனை செய்து அதனை வனப்பகுதியிலேயே புதைத்தனர்.
யானை குட்டி இறப்பிற்கான தகவல்கள் மாறுபட்ட முறையில் வெளியாகி உள்ளது. வயிற்று வலியால் யானை இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் யானையின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன. தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்தி ற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே யானையின் இறப்பு குறித்து துணை இயக்குனர் ஆனந்த் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்