search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasis"

    • ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
    • ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் வலியுறுத்தினர்.

    மதுரை

    திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் உயிரிழந்த பேரவையின் தலைவர் ஜி.ஆர். ஜெயகார்த்தியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை என அறிவித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு உரிமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் போது வருவாய் துறையினர்கள் மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் புதிய தலைவராக ராமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் பிரகாஷ், மணி, மார்க்கெட் ராமமூர்த்தி, கோபால், சோனைமுத்து உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • கோடை காலத்தில் பயறு வகைகளை விதையுங்கள் என வேளாண் அதிகாரி வலியுறுத்தினார்.
    • இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் சிவராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது கோடை மழையை பயன்படுத்தி நெல் தரிசில் பயறு விதைப்பதால் மழை நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும். பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சில் காணப்படும் ரைசோபியம் என்ற பாக்டீரியா காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். எனவே மண்ணிற்கு தழைச்சத்து கிடைக்கிறது. பயறுச்செடிகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும். காய்ந்த இலை சருகுகள் மண்ணில் அங்ககத் தன்மையை அதிகரிக்கும். களைச் செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படும்.

    எனவே விவசாயிகள் பயறு வகைகள் விதைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வேளாண் விரிவாக்க மையத்தில் 65 முதல் 75 நாட்களில் விளையக்கூடிய வம்பன் 8 மற்றும் வம்பன் 10 உளுந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடுகுசந்தை ஊராட்சியில் நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.
    • காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை ஊராட்சி தலைவர் காளிமுத்து. இவர் முன்னாள் அ.தி.மு.க. கடலாடி ஒன்றிய கவுன்சிலராகவும், 25 வருட மாக சத்திரம் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். கடுகு சந்தை ஊராட்சித்தலைவர் காளிமுத்து கூறுகையில்:-

    கடுகு சந்தை ஊராட்சியில் மினி பாரஸ்ட் என ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மெகா பாரஸ்ட் என 5 ஆயிரம் மரக் கன்றுகள் வளர்த்து கடுகு சந்தை ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றி உள் ளேன். இந்த கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட் டம் தேவர்நகர், கடுகுசந்தை பகுதிகளுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவர்நகர் உயர் நிலைப்பள்ளி, தொடக்கப்ப ள்ளியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.

    தேவர் நகர் உயர்நிலைப் பள்ளி சமையலறை கட்டிடத்திற்கு ரூ.7.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சத்தி ரம் கிராமத்தில் இருந்து கூரான்கோட்டை செல்லும் சாலை அருகே புதிய ஊருணி அமைத்து படித்துறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடுகு சந்தை ஊராட்சி சத்திரம், நடுத்தெரு, மேற்கு தெரு, கிழக்குத் தெரு, பகுதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக் கப்பட்டுள்ளது.

    கடுகுசந்தை ஊராட்சியில் ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் 5லட்சம்பனை மரங்கள் உள்ளன. ஆகையால் பனை தொழி லாளர்களுக்காக கடுகு சந்தை ஊராட்சி யில் பனங்கற்கண்டு தொழிற் சாலை அமைக்க வேண்டும். சத்திரம் பகுதியில் ராமேசுவரம் முதல் திருச்செந்தூர் செல் லும் பக்தர்கள் சத்திரத்தில் உள்ள ராஜாசத்திரம் பகுதியில் தங்கி செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக சத்திரத்தில் உள்ள ராஜா ஊரு ணிக்கு படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    சத்திரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்திரம், கடுகுசந்தை, முத்துராம லிங்கபுரம், தேவர் நகர், ஆதிதிராவிடர் காலனி, ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கட்டிடம் புதிதாக கட்டித் தரவேண்டும். கண்மாய்களை தூர் வாரி, மடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண் டும். தெருவிளக்குகள் விஸ்தரிப்பு செய்து தர வேண்டும்.

    நெல் உலர்க்களம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். கடுகுசந்தை ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வா ய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது. அதனை தூர்வாரி கடுகு சந்தை ஊராட்சியில் உள்ள கண் மாய்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதுகுளத்தூர் யூனியனில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
    • தலைவர் வலியுறுத்தினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் யூனியனில் 46 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நீராதாரம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், யூனியன் தலைவர் சண்முகபிரியா ராஜேஷ் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வரவேற்றார். இதில் யூனியன் தலைவர் சண்முக பிரியா ராஜேஷ் பேசுகையில், புழுதிக்குளம் எனது கவுன்சிலுக்கு உட்பட்டது. இந்த பகுதிக்கு பாம்பூர் ஜம்ப்பில் இருந்து காவிரி குடிநீர் வர வேண்டும். ஆனால் அது பரமக்குடி தாலுகா ஆகும். அங்கிருந்து குடிநீர் விடுவதில்லை. இப்படித்தான் முதுகுளத்தூர் யூனியன் முழுதும் ஜம்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் கூட வழங்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்?. காவிரி குடிநீர் விரிவாக்கத்தில் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் தொட்டிகளை அமைத்து கிராமங்களுக்கு தேவையான குடிநீரை வழங்க வேண்டும் என்றார்.

    பயிற்சி கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விளங்குளத்தூர் கனகவள்ளிமுத்துவேல், செல்வநாயகபுரம் பால்சாமி, காக்கூர்ஜெயமணிராஜா, குமாரகுறிச்சி செந்தில்குமார், மைக்கேல் பட்டணம் குழந்தை தெரேஸ் சிங்கராயர், யூனியன் மேலாளர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    • சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்குமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, குருவித்துறை, திருவேடகம், மேலக்கால், நெடுங்குளம், தச்சம்பத்து, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த படிப்பு களுக்காகவும் மதுரை நகர் பகுதிகளுக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர்.

    இவர்கள் கல்லூரி முடிந்து மாலை 5மணிக்கு மேல் வீடு திரும்புவதற்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து போதுமான பஸ்வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6 மணி முதல் 7.30மணி வரை சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதி களுக்கு எந்த ஒரு பஸ்சும் இல்லாததால் தினசரி சுமார் 2மணி நேரம் பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும், ஆகை யால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிக ளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் இதில் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

    • நாலுகோட்டை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது.
    • பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    மேற்பார்வையாளர் பிரபா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் மீனாட்சி, காளியம்மை, கனிமொழி, நேத்ரா, தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெயர் ஒப்புதல் பெறப்பட்டது.

    இங்குள்ள அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது. வரவு-செலவு கணக்கு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    கழிவுநீர் செல்ல உறிஞ்சி குழி அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, பால்ரூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் அம்பேத்கர்-பெரியார் சிலை அமைக்க வேண்டும்.
    • தெருமுனை பிரசார கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண் மனை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் அம்பேத்க ரின் 132-வது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா முன்னிலை வகித்தார். இந்திய இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார்.

    பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கி ணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாத புரத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை அமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம்,கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிசை படு கொலை ெசய்ததை வன்மையாக கண்டிக்கி றோம். அவரை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிர சாரத்தில் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தபட்டது
    • மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார்

    பெரம்பலூர்:


    பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்திடம் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில தலைவர் காரை சுப்ரமணியன் அளித்துள்ள மனுவில், மத்திய, மாநில அரசுகள் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி நரிக்குறவர் இன பிள்ளைகள் மேல்படிப்பு படிப்பதற்க்காக நடப்பு கல்வியாண்டில் சாதி சான்றிதழ் அவசியம் தேவைபடுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார் .


    • ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
    • சட்டசபையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பேசியதாவது:-

    முருகனின் அறுபடை வீடுகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலா துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலா வெளிநாட்டவர்களுக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் புதுமையாக இருக்கும்.

    இதுபோல் ராமேசுவரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில் போன்ற மிகச்சிறப்பு மிக்க கோவில்களுக்கு ஒவ்வொரு ஊரிலிருந்தும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

    சுற்றுலா துறையின் மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 53 தமிழ்நாடு ஓட்டல்களை முறையாக பராமரித்து தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.

    அனைத்து சுற்றுலா தலங்களிலும் தகவல் மையம் அமைக்க வேண்டும். அதிக பயணிகள் வரும் இடங்களை கண்டறிந்து, அரசு அவற்றிற்கு சுற்றுலா மையம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    ஒரு சுற்றுலா தலத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு நேரடி பஸ் வசதி இருக்க வேண்டும். மலை, கடல் போன்ற ஆபத்தான பகுதிகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம். சுற்றுலா துறையும் மேம்படும். நமது கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும்.

    ராஜபாளையம் தொகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் அணைப்பகுதியையும், சஞ்சீவி மலையையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்.

    ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக தென்காசி ரோடு வரையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட வேண்டும்.
    • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் தலைமை அலுவலகமான முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்ம னை பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

    3 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கல்வி அலுவல கத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆவணங்கள் எரிந்து சாம்ப லானது. தற்போது அந்த அறை சீரமைக்கப்பட்டு மீண்டும் முதன்மைக்கல்வி அலுவலகம் அந்த கட்டி டத்திலேயே இயங்கி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவல கம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலைக்கல்வி) பழைய கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் கல்வித்து றையின் துணை திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ. அலுவலகம், மாவட்ட உடற்கல்வி இயக்கு நர் அலுவலம், தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவை ராமநாதபுரத்தில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. மேலும் ஜெ.ஆர்.சி., பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் போன்ற அலுவல கங்களும் ராமநாதபுரத்தில் இயங்கி வருகின்றன.

    எனவே ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் பெரும்பாலான செயல்பாடு களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தையே சார்ந்து உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங் களை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுப்பன் கால்வாயை தூர்வார வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தினர்.
    • சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மானாமதுரை

    மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டம் இளையான்குடியில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஹாரூன்ரசீது தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளராக அகமது சிராஜீதீன், துணைச் செயலாளர்களாக பைசூல் ரகுமான், சதாம் ஹூசேன் முஜிபர் ரஹ்மான், பொருளாளராக ஷேக்யமானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில், மானாமதுரையில் இருந்து இளையான்குடி செல்லும் சுப்பன் கால்வாயை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், காளையார் கோவில் உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்க வேண்டும், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆம்புலன்ஸ் சேவை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
    • புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தலித் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2022 - 2023-ம் நிதியாண்டில் புதுவை அரசுக்கு சுமார் ரூ.413 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதை பயன்படுத்தி மாநில அரசின் திட்டங்கள் மூலம் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டிற்கு துணைத்திட்ட நிதியை செலவிட வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.

    ஒதுக்கப்பட்ட ரூ.413 கோடியில் சுமார் ரூ.166 கோடியை புதுவை அரசு செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது. புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலித் மக்களுக்கான துணைத்திட்ட நிதி முறையாக செலவிடப்படுவதில்லை.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் துணைத்திட்ட நிதி ரூ.925 கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.

    புதுவை அரசின் இத்தகைய தலித் விரோத போக்கு மாநிலத்தில் வாழும் 4 லட்சம் தலித் மக்களுக்கு இழைக்கும் வரலாற்று துரோகம்.

    புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் இத்தகைய தலித் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டிக்கிறோம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான காரணத்தை விளக்க வேண்டும். தலித் மக்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் தனது ஏஜென்ட்கள் மூலம் குவிக்க வேண்டும் என்று அக்கறை காட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கான நிதியை செலவிடுவதில் துளியும் ஈடுபாடு காட்டுவதில்லை.

    இந்த நிதி ஆண்டில் தலித் மக்களுக்கான துணை திட்ட நிதி சுமார் ரூ.166 கோடியை வீணடித்த துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பொறுப்பற்ற செயல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×