என் மலர்
நீங்கள் தேடியது "Employment Camp"
- வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு அறை எண் 439, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
- எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 28.10.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ந்தேதி நடக்கிறது.
- நேர்காணலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி) மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தமிழகத்தில் உள்ள ஓசூர் ஆலையில் பணிபுரிய பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த முகாமில் 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம்.
உடற்தகுதியில் உயரம் குறைந்தபட்சம் 145 செமீ இருக்க வேண்டும். எடை 43 கிலோ முதல் 65 கிலோ வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு, 12 நாட்கள் பயிற்சி நிறைவுக்கு பிறகு ரூ.16 ஆயிரம் மாதச்சம்பளத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நம்பிக்கைக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சுசூழல் ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும் பி.எப்., ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை பிடித்தம் செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் உயர்கல்வி பயிலும் வசதியும் உண்டு. மேற்காணும் வேலைக்கான நேர்காணல் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சிவகங்கை மன்னர்துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த நேர்காணலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி) மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
விரைந்து மாறி வரும் தொழில் உலகில் பணியாற்றும் பொழுதே பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாழ்கையில் முன்னேறவும், புதுமைமிகு எந்திரங்களை இயக்கத் தெரிந்து கொள்ளவும், மெய்நிகர் யதார்தத்தின் உதவியுடன் மெருகூட்டும் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் இது நல்ல வாய்ப்பு ஆகும்.
எனவே,சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மு காம் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும்பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து நேற்று கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
619 பேர் தேர்வு
முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர். இதில் 619 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் முகாமில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வரவேற்றார்.
பணி நியமன ஆணை
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி. கலந்துகொண்டு தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, வாழ்த்தி பேசினார். முன்னதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞ ர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முகாமில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 800 பேர் தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாகாவர்கள் திறமை களை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
ராஜபாளையம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தனர்.
ஆலங்குளம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகன், ஆலங்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட 425 பேரில், தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.
- 3-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெற உள்ளது.
இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற் றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பொறியியல் படித்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பய ன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
- தனியார் நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதலமைச்சர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15-ந் தேதி சென்னையில் நடந்த விழாவில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வருகிற 5-ந் தேதி திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 11, 25-ந் தேதிகளில் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையங்களில் வருகிற 11 - ந் தேதி மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள் ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 - ம் வகுப்பு , எஸ்.எஸ்.எல்.சி. , பிளஸ் -2 , பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ. , டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்காணும் கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் முகாம் அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.
- சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
சிவகங்கை
சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார்துறை மகளிர் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஒசூர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஆலையில் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே 18- 20 வயது வரை உள்ள 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பயிற்சியுடன் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். அந்த பதவிகளுக்கான நேர்காணல், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 15- தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் கல்விச்சான்றுடன், நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்காது.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
- முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய தொழிற்கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 27-ந் தேதி பொள்ளாச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கூறும்போது,
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) சேர்த்து 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளை போல ஆட்டோமிசின், ரோபோடிக் பயிற்சிகள் வழங்கும் நவீனமான தொழிற்பயிற்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.