என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "estivals Action"
- திருவிழா காலங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது.
- தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் கண்காணிக்க வலியுறுத்தல்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்களில் உள்ள கோவில்களில் திரு விழாக்கள் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின்போது இருதரப்பினரிடையே ஏதேனும் ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக வெடித்து மோதல் ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
இதனால் அந்த பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின்போது ஏற்படும் தகராறுகளை தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற்போல் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோவில் திருவிழாக்களில் மோதல் ஏற்படும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தில் கோவில் திருவிழா வின்போது மோதல் ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் ராஜ பாளையத்திலும் திருவிழா ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தனிப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கு உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அப்போது தான் விருதுநகர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் மோதல்கள் தடுக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்