என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fire accident in match box factory
நீங்கள் தேடியது "Fire Accident In Match Box Factory"
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் நடந்த விபத்தில் உடல் கருகிய தொழிலாளி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவகாசி:
சிவகாசியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் தாயில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 48) என்பவர் ஒரு அறையில் ரசாயன மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவைகள் உரசி தீப்பிடித்தது. அருகில் மத்தாப்புகளும் இருந்ததால் அதில் தீப்பிடித்து மளமளவென பரவி புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய நாகராஜன் உடல் கருகினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
தீயில் உடல் கருகிய நாகராஜனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் தாயில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 48) என்பவர் ஒரு அறையில் ரசாயன மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவைகள் உரசி தீப்பிடித்தது. அருகில் மத்தாப்புகளும் இருந்ததால் அதில் தீப்பிடித்து மளமளவென பரவி புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய நாகராஜன் உடல் கருகினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
தீயில் உடல் கருகிய நாகராஜனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X