search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire broke out"

    • இந்த தொழிற்சாலையில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • இந்த கட்டிடத்தில் இது முதல்முறை தீ விபத்து அல்ல கடந்த ஆண்டும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தொழிற்சாலையில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சிடி பிரிவில், 3 வி.கே பகுதியில் உள்ள கட்டிடத்தில் ரோலிங் எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அந்த எந்திரத்தில் சிறிய புகை ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதமும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த கட்டிடத்தில் இது முதல்முறை தீ விபத்து அல்ல கடந்த ஆண்டும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதே கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைப் பற்றி தொழிற்சாலை நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் தொழிலாளர்களை பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்த்தினர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தீ பேருந்துகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • அலுவலகத்தில் இருந்த கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.

    திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, பேருந்துகள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர அம்பத்தூர் உள்பட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ பேருந்துகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×