என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman"

    • மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
    • காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.

    லிமா:

    தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.

    அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.

    இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

    இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் மீனவர்
    • இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). மீனவர். இவருக்கு திரும ணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று ள்ளனர்.

    இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமானார்.

    இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகுகளில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் தேடும் பணி நடந்து வருகிறது.

    • மீனவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.
    • மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மழையால் சிரமப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அப்பகுதி சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோயிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.

    • கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர் பாண்டி(வயது30). இவர் நேற்று முன்தினம் (20-ந் தேதி) மீன்பிடி வலை, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாத னங்களை சிறிய நாட்டு படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்றார்.

    பின்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் மீன்பிடி சாதனங்களை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது பாண்டி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து மீனவர் பாண்டியை தேடினர்.

    அவர் கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நவீன ரோந்து படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    கடலில் மூழ்கிய பாண்டியை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நீடித்தது. கடலோர காவல்படையினருடன் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடி பார்த்தும் பாண்டி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி இன்று 3-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். 3 நாட்களாகியும் பாண்டியை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றார்.
    • அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார்.

    தூத்துக்குடி :

    தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுக்குடி அருகே உள்ள சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது45). சங்குகுழி மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றனர். அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார். அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்த னர்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தருவை குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • மனுக்களை வழங்கி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் மீனவர்களின் குறைகள் மற்றும் குறைகளை கேட்ட றிந்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். மீனவர்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கை களை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்க ளாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க கோருதல், மீனவர்கள் கடலில் இறந்ததற்கான இறப்பு நிவாரண தொகை பெற கோருதல், மீன்பிடித்தடை காலத்திற்கான உதவித்தொகை பெறுதல், பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ய கோருதல், மீனவர்களுக்கான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண உத்தரவி டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக மாற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

    பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவிகள் என தொடங்கி அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக உருவாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றனர். இதில் மீனவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மீனவர்கள் ஒவ்வொருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக உருவாக்குவதற்கு ஏதுவாக தனித்தனியாகவும், மீனவ சங்கம் சார்பிலும் மரக்கன்றுகளை கடலோர பகுதிகளில் நடுவதன் மூலம் மண் அரிப்பில் இருந்து காத்திடவும், சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார் சிவக்குமார், கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று அதிகாலை 4 மணிக்கு செல்வமணி கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
    • அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56).

    இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

    செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.

    துறைமுகத்தில் 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார்.

    இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும் வழியில் படகு மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அருகில் தேடி உள்ளனர்.

    அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளது தெரிய வந்தது.

    இதனை எடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக செல்வமணி உடல் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
    • திடீரென மயங்கி நிலையில் கடலில் மூழ்கி கிடந்துள்ளார் கரைக்கு சென்ற போது இறந்து விட்டது தெரியவந்தது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54).

    இவர் நேற்று (புதன்கிழமை) காலை பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.

    சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கடலில் இறங்கி சம்பா நண்டு பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த மீனவர்கள் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.

    அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலையை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கி நிலையில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார்.

    உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சேகர் உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மைக்கேல்ராஜா நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 மீனவர்களுடன் கடலில் சங்கு குளிப்பதற்காக படகில் சென்றார்.
    • திருச்செந்தூர்- காயல்பட்டினம் கடல் பகுதியில் செல்லும் போது படகில் இருந்து மைக்கேல்ராஜா திடீரென கடலில் தவறி விழுந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜா (வயது 26) மீனவர். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 மீனவர்களுடன் கடலில் சங்கு குளிப்பதற்காக படகில் சென்றார்.

    திருச்செந்தூர்- காயல்பட்டினம் கடல் பகுதியில் செல்லும் போது படகில் இருந்து மைக்கேல்ராஜா திடீரென கடலில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட சக மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு படகில் ஏற்றி தூத்துக்குடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மைக்கேல்ராஜா நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்,

    இது குறித்து கடலோர பாதுகாப்பு குழுமம் தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    • கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
    • தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.

    இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    ×