என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » floods hit japan
நீங்கள் தேடியது "floods hit Japan"
கடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளனர் .
டோக்கியோ :
ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் பரவாலாக அந்நாடு பாதிப்புகள் மற்றும் சேதங்களை சந்திப்பது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் பரவாலாக அந்நாடு பாதிப்புகள் மற்றும் சேதங்களை சந்திப்பது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X