என் மலர்
நீங்கள் தேடியது "Food"
- அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு.
- மதிய உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
அம்மாபேட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் பூண்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறித்தும், பூண்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கூத்தரசன், முகமது அமானுல்லா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்கள்-குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 200பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
- விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் விஜயராஜா செய்திருந்தார்.
புதுச்சேரி:
வ. உ. சி. முன்னாள் மாணவர்கள் மனித நேய அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்கள்-குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 200பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீதாராமன் மற்றும் பிரதீப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரியாணி வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் விஜயராஜா செய்திருந்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் பெரியசாமி, மணவாளன், முருகன் கலந்து கொண்டனர்.
- ரூ.14 ஆயிரம் செலவில் நீர் உரிஞ்சும் குழி அமைக்கும் பணி.
- ரூ.4.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.83 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சித்தர்காடு கிராம ஊராட்சியில் கிளிண்டன் கார்டனில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் 2022-23 கீழ் ரூ.8.27 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கணபதி நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 ஆயிரம் செலவில் நீர் உரிஞ்சும் குழி அமைக்கும் பணி, சோழியத் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்பட பணிகளை ஆய்வு செய்து சித்தர்காடு முதன்மைச் சாலையில் உள்ள பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியையும் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்மஞ்சுளா (கி.ஊ), உதவி பொறியாளர் பூங்குழலி, உதவி செயற்பொறியாளர் பொறுப்பு ராஜேஷ் கண்ணன், மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பரமேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் வேலு-ரெத்தினவேல் வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, ஊராட்சி செயலர் வெங்கடேசன், துணைத் தலைவர் ரமணி தனபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- ஐந்து வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில்கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் கனுப் பொங்கலை முன்னிட்டு ஆண்டாள் புறப்பாடு நடைபெற்றது.
ஆண்டாள் ஹலாதினி புஷ்கரணியில் எழுந்தருளி பிறந்த வீடு மற்றும் உடன் பிறந்தவர்கள் நலம் பெற பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து தாயாரின் திருவடி நிலையான ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனை அடுத்து ஆண்டா ளுக்கு மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது.
ஆண்டாள் அண்ணமிடும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்களது பிறந்த வீடும் உடன் பிறந்தவர்களும் நலமுடன் வாழ தாங்கள் கொண்டு வந்த ஐந்து வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு செய்தனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை திடீர்ஆய்வு மேற்கொண்டனர்
- காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் போன்றவற்றை 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பயண வழி உணவகங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என பல்வேறு புகார்கள் மீண்டும் வந்தது.அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின்படி, விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் உணவகங்களை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். சுகந்தன் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன் , பிரசாத், பத்மநாபன் , ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் கதிரவன், ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது 2 உணவகங்களின் சமையல் கூடம் சுகாதாரமின்றி காணப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகங்களுக்கு முன்னேற்ற அறிக்கை வழங்கி அவற்றை தற்காலிகமாக நிறுத்தவும் செய்து குறைகளை சரி செய்த பின் மீண்டும் திறக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் 2 உணவகங்கள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் அவற்றிற்கு தலா ரூ,2000அபராதம் விதிக்கப்பட்டதுஆய்வின்போது உணவகங்களில் மீதமான வெஜிடபிள் பிரியாணி ,காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் கேக் மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பாதாம் குளிர்பானங்கள் , சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகியவை சுமார் 150 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஆய்வின் போது உணவக நடத்துவோருக்கு குறைகளை சுட்டி காட்டி 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி 15 நாட்களுக்குள் சரி செய்ய அறிவுறுத்தப் பட்டது. தவறும் பட்சத்தில் சட்டபடியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயணியர்களிடமும் அவ ர்களை கருத்துக்களை கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.இதனால் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.
- கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
- சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு:
உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இறந்து போன கணவன் மற்றும் தாயார் சடலங்களை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம், ஈரோடு அருகே நிகழ்ந்திருக்கிறது.
கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்த சாந்தி-மோகனசுந்தரம் தம்பதிக்கு, மன வளர்ச்சி குன்றிய சரவணக்குமார் என்ற மகனும், சசிரேகா என்ற மகளும் உள்ளனர். சசிரேகா இருந்த வரை கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவர் திருமணமாகி சென்ற பிறகு சாந்தி, தனது வயதான தாயார், கணவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வந்தார்.
பல நாட்கள் பட்டினியாகவும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய கூட பணமில்லாத நிலையில், இரு சடலங்களை வீட்டிற்குள்ளேயே வைத்து விட்டு இருந்துள்ளார். சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருசடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து பின்னர் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
- கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அரசு மன்னர் கலைக்கல்லூரியும், அதன் அருகிலேயே ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வெளியூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காலை உணவை புறக்கணித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து சாப்பாட்டு தட்டுகளுடன் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், புதுக் கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி ஆதி திராவிடர் அரசு மாணவர் நல விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றோம்.
எங்களுக்கு அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. உணவு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித் தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக 5 மாணவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் சாப்பாட்டு தட்டுகளுடன் போராட்டத் தில் ஈடுபட்டது புதுக்கோட் டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி, வெண்மணி, ஆந்தக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தலா ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்காலிக இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மேலும் வெயிலில் குழந்தைகள் அமர்ந்திருக்கும் அவலமும் உள்ளது.
எனவே உடனடியாக அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 895 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- காய்கறி, சாம்பார், ரவா, கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று தமிழ்நாட்டில் இந்த திட்டம் தொடங் கப்பட்டது.
தஞ்சை மாநகராட் சியில் உள்ள 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத ்தப்பட்டு வருகிறது.
இன்று முதல் இரண்டாம் கட்டமாக தஞ்சை மாநகராட் சியில் உள்ள 7 மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் 895 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் தொடங் கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் சரவணக் குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்கள் மாணவர்க ளுக்கு காலை உணவு பரிமாறினர்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ரவா உப்புமா, ரவா காய்கறிக்கு கிச்செடி , வெண்பொங்கல் ,அரிசி உப்புமா, அரிசி உப்புமா காய்கறி , சாம்பார், ரவா காய்கறிக்கு கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இன்று வெண் பொங்கல் காய்கறி சாம்பார் மற்றும் கேசரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜெகதீசன், கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கார்த்திகேயன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
- குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது.
திருப்பூர் :
திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா சந்திப்பு அருகே செயல்படும் ஒரு பேக்கரியுடன் கூடிய உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குளிர்பானங்கள், தின்பண்டங்கள் உள்பட அனைத்து உணவு பொருட்களையும் சோதனை செய்தனர். குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? சமைத்த அசைவ உணவு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்படுகிறதா? காலாவதி உணவுப் பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த கெட்டுப்போன 2 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாபபுத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறும்போது, இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- முதல் நாள் இரவு விற்கப்படாத உணவுகளை சுட வைத்து ஓட்டல்களில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வேலைக்கு செல்வோர், சமைக்க நேரமில்லாத தம்பதிகள், வெளியூர்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பெரும்பாலும் ஓட்டல்கள் மற்றும் கையேந்தி பவன்களில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி சில ஓட்டல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற உணவுப்பொருட்களை வைத்து உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
மதுரையில் செயல்படும் ஓட்டல்களில் இதுபோன்ற நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் சாலையோர திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. திறந்த வெளியில் எந்த சுகாதாரமும் இல்லாத இடத்தில் இட்லி, தோசை, வடை, இறைச்சி, பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பசிக்காக அவசர கதியில் வாங்கி உட்கொள்ளும் மக்கள் வயிற்று உபாதை, வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக எண்ணை பலகாரம் பயன்படுத்தும் வடை, புரோட்டா கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி உணவு சமைக்கப்படுகிறது. இதனால் அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
மதுரை நகரில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள், பைபாஸ் ரோடு மற்றும் சாலையோரங்களில் செயல்படும் சில கடைகளிலும் முதல் நாள் விற்பனையாகாத உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேேபால சில பெரிய ஓட்டல்களிலும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை நகரில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க வேண்டிய சேவை தொழிலை மேற்கொள்ளும் உணவகங்கள் அதனை மீறி வணிக நோக்கத்தில் செயல்படுகின்றன.
குறைந்த விலையில் கிடைக்கும் ரேசன் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி அதன்மூலம் உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றன. இதனை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் அடிக்கடி உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றன. இதற்கு முறையான விலை பட்டியலை கடையில் வைப்பதில்லை. இதனால் சாப்பிட்டு விட்டு பலர் அதிக பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தூக்கத்தில் உள்ளனர். அவர்கள் இனிமேலாவது விழித்துக்கொண்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ - மாணவிகள் காட்சிபடுத்தியிருந்தனர்.
- மூலிகையால் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தமிழ்நாடு, இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் கல்லூரி இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கியது.
மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் 300 வகையான பாரம்பரிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
உணவு திருவிழாவினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் உற்சாகமாக பறை இசைத்ததை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
தொடர்ந்து 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக பாரம்பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள் சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்லி வகைகள், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மேலும் தர்பூசணியில் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
இதனை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டு களித்து சென்றனர்.
மொத்தம் இரண்டு நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் உணவு பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன.