என் மலர்
நீங்கள் தேடியது "Foods"
- அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
- உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது இன்றைய பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதனை எளிதாக்கும் ஒரு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம்!

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
சமைக்கும்போது குழந்தைகளின் உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பழங்களை துண்டுகளாக வெட்டுவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறபோது உணவை உண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள். அவ்வாறு செய்கிறபோது விரும்பி சாப்பிடுவார்கள்.

காய்கறிகளையும், பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தைகள் முழு கவனத்துடனும் அதனை ரசித்து சாப்பிட முடியும்.
கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அவர்களைப் பயமுறுத்தாமல், அடிக்காமல் பொறுமையாக இருந்து, உணவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு உணவை சிறிய உருண்டைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விருப்பத்துடன் உண்பார்கள்.
- கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
- ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான நோயாக புற்றுநோய் உள்ளது. ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில வகை உணவுகள், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த உணவுகள் பற்றி...

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்:
கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பிஸ்பெனால் ஏ என்ற வேதிப் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கார்பனேற்ற குளிர்பானங்கள்:
கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனேற்ற எண்ணெய்:
உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
'மைக்ரோவேவ்' பாப்கார்ன்:
மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை:
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.

பதப்படுத்திய இறைச்சி:
பேக்கான், சாசேஜ் போன்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் அவை கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பிரிசர்வேட்டிவ்களுடன், நைட்ரேட்கள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.
சிவப்பு இறைச்சி:
'சிவப்பு இறைச்சி' எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது. குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.
ஊறுகாய்:
ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிட்ட இறைச்சி:
புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

கருவாடு:
உப்பிட்டு தயாரிக்கப்படும் மீன் கருவாட்டில், நைட்ரோசாமைகள் உள்ளன. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
மேற்கண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்வது புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராகின்றன.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, உச்சிப்புளி, தேவிபட்டினம் உள்பட பல்வேறு நகரங்களில் பெரும்பாலான உண வகங்கள், சாலையோர தள்ளு வண்டிகள், இறைச்சி விற்பனை கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்கப்படுவதில்லை. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால் பொது மக்களுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் தொடர்கின்றன.
ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் சுமார் 300க்கும் மேல் உள்ளன. இவற்றில் அசைவ சாப்பாடு, பிரியாணி என காலை, பகல், இரவு நேரங்களில் விற்பனை செய்யப் படுகின்றன. பெரும்பாலான உணவகங்கள் சுகாதார மற்ற நிலையில் உள்ளது.
தண்ணீர் தொட்டி, உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமற்ற நிலை, விதிமுறைப்படி பாத்தி ரங்கள் கழுவப்படாதது, திறந்தவெளியில் உணவு பண்டங்கள், பயன் படுத்தப்பட்ட எண்ணைகள், காலாவதியான இறைச்சி என பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.
நகர் பகுதியில் மட்டும் அதிகம் இருந்த துரித உணவகங்கள் தற்போது பல்வேறு இடங்களில் அதிகரித்து உள்ளன. இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை யினர் மற்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கண்துடைப்பு ஆய்வு பணிகளை பெயரளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
ரோட்டோர திறந்த வெளிக்கடைகள் பாதுகாப்பு இல்லாமல் உணவுகளை வைத்து விற்பனை செய்வது தொடர்கிறது. உணவு பாதுகாப்புத்துறையினரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய பொதுமக்கள் மட்டுமே.
சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
- நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
தாராபுரம் :
வாட்டி வதைக்கும் வெயிலால் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:- வெய்யில் காலத்தில், சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தண்ணீர் குறைந்தளவு குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதே இதற்கு காரணம்.அனைத்து காலங்களிலும், சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ளலாம். ஜூஸ் ஆக குடிக்காமல், நேரடியாக பழங்களாக உட்கொள்வது நல்லது.
தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அதைத் தவிர்க்கலாம்.
மாமிச உணவுகளை வாரம் ஒரு முறை உட்கொள்ளலாம். கோழி இறைச்சி, மீன் உட்கொ ள்ளலாம். அனைத்து விதமான பேக்கரி உணவு, உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் ஒரு சில கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்களை குறைவாக எடுக்க வேண்டும்.பிளாக் டீ, காபி, கிரீன் டீ, ஆகியவற்றை தவிர்க்கலாம். சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதற்குபதில், சாதாரணதண்ணீர் குடிப்பது சிறந்தது.கார்பன், செயற்கை நிறமிகள் நிறைந்த குளிர்பா னங்களை, முற்றி லும் தவிர்க்க வே ண்டும். முக்கி யமாக மது அருந்துவது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.உணவியல் நிபுணர்(டயட்டி சியன்) கவிதா கூறியதாவது:
வெய்யில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம்எடுத்துக் கொள்ளலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள், கம்மங்கூழ், கேப்பைக்கூழ் உட்கொள்ளலாம். இனிப்பு வகைகள், அதிக காரம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, காபி, டீ, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கம்மங்கூழ், கேப்பைக்கூழ் ஆகியவற்றை, 200 மி.லி., அளவு எடுக்க வேண்டும். நீர் மோர் குடிக்க லாம். இவையனைத்துக்கும் மேல், தண்ணீர் குடிப்பதே சிறந்தது.செயற்கை குளிர்பானங்களில், சர்க்கரை அதிகம் இருப்ப தால், அவற்றால் எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோயாளிகள், நீர்ச்சத்து காய்கறி எடுத்துக் கொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- சிராங்குடி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
- திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட உணவுகள் வைக்கப்பட்டன.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிராங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு வகை திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த விழாவிற்கு சிராங்குடி தலைமையாசிரியர் ஞானம்மாள் தலைமை ஏற்றார்.
ஆசிரியர் டேனியல் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தி னராக மூத்தாக்குறிச்சி தலைமையாசிரியர் செல்வராணி, பி.டி.ஏ ஆசிரியர் ரெத்தினப் பிரியா , (பாத்திமா மரியம் பள்ளி) தனியார் பள்ளி ஆசிரியர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உணவு வகை மாற்றம் பற்றியும் உணவு வகை மாற்றத்தினால் மனிதனின் ஆயுள் காலம் குறைவது பற்றியும் முக்கியமானவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் முக்கியமான வர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக சிறந்தவர்களாக உணவு திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் கண்மணி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
- நாயின் படத்திற்கு தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
கும்பகோணம்:
கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). ஓவியர்.
இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர்களுக்கு ராகமாலிகா என்கிற மகளும், மனோ என்கிற மகனும் உள்ளனர்.
பன்னீர்செல்வத்தின் மகன் மனோவும் ஓவியராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நாய் ஒன்றை ஜிஞ்சு என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர்.
இந்த வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.
இதனால் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இழந்து தவிக்கும் உணர்வில் பன்னீர்செல்வம் குடும்பமே துயரத்தில் மூழ்கினர்.
பன்னீர்செல்வம் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உருவப்படத்தை வீட்டில் வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஓவியர் பன்னீர்செல்வம் கூறுகையில், வளர்ப்பு நாயை, நாங்கள் வீட்டில் ஒரு நபராகவே வைத்து பராமரித்து வந்தோம். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதொல்லாம் அந்த நாய் தான் வீட்டுக்கு பாதுகாப்பு.
எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வோம்.
ஒருமுறை வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பை ஜிஞ்சு மட்டும் தனியாக குறைத்து விரட்டியது. திடீரென உடல் நலக்குறைவால் வளர்ப்பு நாய் உயிரிழந்தது.
இதனால் அதன் உருவப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தி வருகிறோம் என்றார்.
- உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் கிருஷ்ணனுக்கு படைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் கிராமத்தில் உள்ள கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவை யொட்டி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக கிருஷ்ணனுக்கு பிடித்த சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
- 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.
நாகப்பட்டினம்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.
இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.
சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.
மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.
- உடலில் செலினியம் அளவு குறைவதும் தூக்கத்தை பாதிக்கும்.
- ஊட்டச்சத்துக்கள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டவை.
கவலை, வேலை நெருக்கடி, நிதி நெருக்கடி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் தூக்கத்தை தொலைத்து நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். தூங்கச் செல்லும்போது அவை பற்றிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. உணவு பழக்கத்தில் எளிய மாற்றங்களை செய்வதன் மூலமும் தூக்கமின்றி தவிப்பதை தவிர்க்கலாம். தூக்கத்தை தூண்டும் அத்தகைய உணவு வகைகளில் சில உங்கள் பார்வைக்கு....
நண்டு
உடலில் செலினியம் அளவு குறைவதும் தூக்கத்தை பாதிக்கும். நண்டு அதிகம் சாப்பிடுவது செலினியம் தேவையை பூர்த்தி செய்ய உதவும். இதிலுள்ள கால்சியம், வைட்டமின் பி6 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டவை.
வாழைப்பழங்கள்
ஒரு வாழைப்பழத்தில் சுமார் 375 மில்லி கிராம் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது தினமும் உடலுக்கு தேவைப்படும் பொட்டாசியத்தில் ஐந்தில் ஒரு பங்கு அளவை பூர்த்தி செய்யக்கூடியது. தூங்கச் செல்லும்போது ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது வைட்டமின் பி6 அளவை அதிகரிக்க வைக்கும். உடலில் வைட்டமின் பி6 அளவு குறைந்திருந்தால் செரோடோனின் செயல்பாட்டை பாதிக்கும். வாழைப்பழம் சாப்பிடுவது அதனை நிவர்த்தி செய்து சீரான தூக்கத்திற்கு வித்திடும்.
பாதாம்
பாதாம் தூக்கத்தை ஊக்குவிக்கும் குணங்களை கொண்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுக்கு தூக்கமின்மையால் சிரமப்பட்ட மாணவர்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து 14 நாட்களுக்கு 10 பாதாம் கொடுக்கப்பட்டது. பாதாம் சாப்பிட்ட பிறகு தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருந்தது.
பிஸ்தா
பிஸ்தாவில் தூக்கத்தை தூண்ட உதவும் வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. அவை மெலடோனின் ஹார்மோன் செயல்பாடுகளை மேம்படுத்தும் சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும்.
மீன்
2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று முறை சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளை (ஆயில்பிஷ்) சாப்பிட்ட ஆண்கள் தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தனர். அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. இந்த மீன்களில் காணப்படும் வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துக்கள் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்கின்றன. இது தூக்கத்தை தூண்டும் சிறந்த உணவாக இருந்தாலும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்காத பெண்கள் இந்த வகை மீன்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சோயா உணவுகள்
டோபு போன்ற சோயா பொருட்களில் காணப்படும் ஐசோ பிளேவோன்களை அதிகமாக உட்கொள்வது, ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்பது ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐசோ பிளேவோன்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஒரு டம்ளர் சோயா பால் பருகி வரலாம். உணவில் தினமும் சோயா பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பட்டர் பீன்ஸ்
இதனை தினமும் உட்கொள்பவர்களிடத்தில் தூக்கத்தின் தரம் மற்றவர்களை விட 6.6 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி 6 உள்ளன. இவை ஆழ்ந்த தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரிசி
அரிசி, உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீட்டை கொண்டது. அதாவது விரைவாக சர்க்கரையை வெளியிடக்கூடியது. அதே வேளையில் தூக்கத்தை தூண்டுவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், டிரிப்டோபன் என்னும் அமினோ அமில உருவாக்கத்தை எளிதாக்குகிறது. இந்த அமினோ அமிலம்தான் உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.
அதனால் உணவின் ஒரு பகுதியாக அரிசி சாதம் சேர்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் முழு கோதுமை, பாஸ்தா, கம்பு, ரொட்டி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருவது இரவு நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.
முழு தானியங்கள்
அதிக நார்ச்சத்து கொண்ட பொருட்களை உட்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டி இரவு இனிமையான தூக்கத்தை தூண்டும் என்பதும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 26 முதியவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் கணக்கிடப்பட்டது. அதிக நார்ச்சத்து கொண்ட முழுதானியங்களை உட்கொண்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்தனர். காலையில் எழுந்ததும் உற்சான மன நிலை அவர்களிடத்தில் வெளிப்பட்டது.
கிவி பழம்
தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரண்டு கிவி பழங்களை சாப்பிட்ட தம்பதியர் விரைவாக தூங்கியதும், 13 சதவீதம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்ததும் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இந்த பழத்தில் போலேட் எனப்படும் ஒருவகை பி வைட்டமின், செரோடோனின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன.
சூடான பால்
பால் பொருட்களை உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். ஆனால் தூங்க செல்லும் நேரத்தில் பால் குடிப்பதால் குறிப்பிட்ட எந்த நன்மையும் இல்லை என்று சமீபத்திய ஆய்வு முடிவு சொல்கிறது. அதற்கு பதிலாக தினமும் கால்சியம் நிறைந்த பால் பொருட்களை மற்ற சமயங்களில் உட்கொள்வது தூக்கத்தை அதிகரிக்க செய்யும்.
- சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
- சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறையில் உள்ள சுகாதாரக்கேடு தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சமையல் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமையல் கூடத்தை, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா ? உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன்சுத்தத்தை பேணவும், தேவையான அளவு சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
- இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம், கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு அவர்கள் பின்பற்றும் பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டது.
நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயற்கையோடு இணைந்திருக்கும். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள். அங்குதான் வசிக்கவும் செய்வார்கள்.
100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகளில் அவர்கள் என்ன ரகசியங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

தாவர உணவுகள்
உலகில் நீண்டகால வாழ்வதற்கு அவர்கள் தாவரங்கள் சார்ந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். பீன்ஸ், கீரைகள், காய்கறிகள், கிழங்குகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நட்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக கருதுகிறார்கள்.

ஆட்டுப்பால்
இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாட்டுப்பால் மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக செம்மறி ஆட்டுப்பால் குடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாரத்திற்கு மூன்று முட்டை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மீன்
இங்குள்ள மக்கள் தினசரி உணவுகளில் மீன் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் உணவுகளை உண்கின்றனர்.

பால் பொருட்களை தவிர்த்தல்
மேலும் அவர்கள் பாலை குடிப்பதில்லை. குறிப்பாக பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், கிரீம், வெண்ணை, வெண்ணை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை. தவிர்த்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீன்ஸ்
தினமும் குறைந்தது அரை கப் அளவிற்காவது வேகவைத்த பீன்ஸை எடுத்துக்கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் ஒரு மணிதன் தினமும் 20 கிராம் பீன்சையாவது எடுத்துக்கொள்வது, அவர்களை இறக்கும் அபாயங்களில் இருந்து 8 சதவீதம் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளது.
100 வயதை கடந்தவர்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் 90 சதவீதம் வரை அவர்களின் வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வளரும். இதனால் உணவு சமைப்பது எளிது. கிழங்குகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றனர். தானியங்களை அரைத்து பின்னர் சமைத்து சாப்பிடுகின்றனர்.
2002 முதல் அமெரிக்கர்கள் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிட்டவர்கள் என்று கணித்துள்ளது.
- காலை உணவுடன் பழங்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக உட்கொள்ளலாம்.
- நோய் எதிர்ப்பு மண்டலம் திறம்பட செயல்படவும் உதவி செய்யும்.
வயிறு காலியாக இருக்கும்போது, உடல் ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும். பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவற்றை காலையில் உட்கொண்டால் இந்த ஊட்டச்சத்துக்களை உடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குவதோடு நோய் எதிர்ப்பு மண்டலம் திறம்பட செயல்படவும் உதவி செய்யும். அதனால் காலை உணவுடன் பழங்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக உட்கொள்ளலாம். அதற்கு ஏற்ற பழங்கள் இவை...

வாழைப்பழங்கள்
இவை எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அவற்றில் இருக்கும் இயற்கை சர்க்கரை உடலுக்கு விரைவாக ஆற்றலை கொடுக்கும்.

தர்பூசணி
அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது என்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். அதிலும் காலை வேளையில் உண்ணும்போது உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்யும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.

பப்பாளி
இதிலிருக்கும் என்சைம்கள் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலுக்கும் நிவாரணம் தரும்.

ஆரஞ்சு
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.

ஆப்பிள்
ஆப்பிளில் அதிகம் நார்ச்சத்து இருக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. செரிமானத்திற்கும் உதவி புரியும்.

அன்னாசிப்பழம்
இதில் புரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.

மாம்பழம்
வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழங்கள் அன்றைய நாளில் உடலுக்கு தேவையான சத்தை வழங்கி, உற்சாகமுடன் செயல்பட வைக்கும். இதில் சர்க்கரை அதிகம் என்பதால் குறைவாக சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் குறைந்த கலோரிகள் நிரம்பியுள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கக்கூடியவை. செரிமானம் சுமுகமாக நடைபெறுவதற்கு உதவி புரியும்.

கிவி
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. செரிமானத்திற்கு உதவி புரியும்.

திராட்சை
இதில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக அளிக்கும்.