search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "form government"

    கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்ததால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பா.ஜ.க.வின் முன்னணி நிலவரம் சரியத் தொடங்கியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், மதியம் 2.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

    தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்.) ஆதரவுடன் ஆட்சியமைக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. ஆனால், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க வியூகம் வகுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.டி.எஸ். தலைவர் தேவே கவுடாவுடன் சோனியா காந்தி பேசியிருக்கிறார். குலாம் நபி ஆசாத்தும் பேசியுள்ளார்.

    இந்நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் முதலமைச்சர் சித்தராமையா வீட்டில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி ஆட்சிக்கான புதிய வியூகம் வகுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாகவும், இதனை ஏற்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஜே.டி.எஸ். தலைவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.

    இதற்கிடையே முதல்வர் சித்தராமையா இன்று மாலை 4 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #CongressAlliance

    ×