search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "formerstrike"

    • கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.
    • கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

    பொள்ளாச்சி:

    தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுபடுத்தக்கோரி வருகிற ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர்.கடந்த பல மாதங்களாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அர சு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த பட்ச ஆதார விலைக்கு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ150 வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்னை விவசாயிகளின் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ந் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தாகவும் தெரிவித்தனர்.பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.

    • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
    • கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 10 டிஎம்சி வரை தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.

    தமிழகத்தில் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, கோவை திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த திட்டம் இருந்து வருகிறது.

    மேலும், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்திற்கு பாசனத்துக்கும் குடிநீருக்கும் இந்த திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்தை கோவை திருப்பூர் மாவட்டவிவசாயிகள் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள்கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    ஏற்கனவே விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் பெரியசாமி, மணிகண்டன், கார்த்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், திட்டத்தை கைவிடக் கோரியும், திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் படுவதுடன் இரண்டு மாவட்ட குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ×