search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang hacked an old woman"

    • பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.
    • படுகாயமடைந்த மூதாட்டியை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் ராசு மனைவி தேனம்மாள்(75). இவரது உறவினர் ஜீவா(56). இவர் தேனம்மாளின் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரிடம் ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, பசுபதி, இலக்கியா, ஜெயச்சந்திரன் ஆகியோர் தேனம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஜீவா அரிவாளால் தேனம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து ஜீவாவை கைது செய்தனர்.

    ×