search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garnish with gooseberries and nuts"

    • ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று மாலை அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

    அதன்படி, காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் சிவபெருமானுக்கு அன்னம் மற்றும் காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல்,அபிராமபுரம் பகுதியில் உள்ள சிவகாமவல்லி சமேத சர்வேசுவரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மூலத்துவாழியம்மன் அறக்கட்டளை மற்றும் அபிராமபுரம் சிவனடியார்கள் திருகூட்டம் செய்திருந்தனர்.

    ×