என் மலர்
நீங்கள் தேடியது "Gift"
- கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.
- கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கண்மணி ஜான் ஆப் ஆர்க் அனைவரையும் வரவேற்றார்.
திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
பட்டப்படிப்புக்கு பின்புள்ள உயர்கல்விகள் குறித்து குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி உரையாற்றினார்.
அரசு போட்டி தேர்வுகள், பயிற்சி முறைகள் குறித்து உதவி இயக்குனர் ரமேஷ் குமார் சிறப்புரையாற்றினார்.
சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அரசு கடனுதவி பற்றி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சகுந்தலா உரையாற்றினார்.
தொடர்ந்து, வேலைவாய்ப்பு தகவல் குறித்த கையேடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேல் நன்றி கூறினார்.
குந்தவை நாச்சியார் கல்லூரி சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
- விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்ட இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 55-வது தேசிய நூலக வார விழாவை நடத்தியது.
இந்நிலையில் தேசிய நூலக வாரவிழாவின் நிறைவு விழா இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடை பெற்றது.
விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, மாவட்ட மைய முதல் நிலை நூலகர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வாசிப்போம், யோசிப்போம் என்ற தலைப்பில் ெசாற்பொழிவாற்றினார்.
- வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.
- சிறந்த கோலத்தை தேர்வு செய்து சால்வை அணிவித்து கௌரவித்து பரிசு வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்று தஞ்சை 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் தலைமையில், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் பொன்னர், கண்காணிப்பாளர் ராஜா மற்றும் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த கோல போட்டியினை நடத்தினர்.
இந்த கோல போட்டியில் பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.
அதில் முதல் இடத்தை பிடித்த தஞ்சை 42 -வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீ செங்கமல நாச்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆர். பானுப்பிரியா ராஜேஷ்க்கு, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் கோலப்போ ட்டியில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்க ளுக்கும் பரிசு வழங்கப்ப ட்டது.
- மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
- சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.
இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.
இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.
உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.
கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
- 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளான ரேனுகா தங்க பதக்கம், தமிழ் அழகி வெள்ளி பதக்கம், பிரீத்தி வெள்ளி பதக்கம், அனிதா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். மேலும், மாணவர்கள் ரிஃபாயின் கபூர் தங்க பதக்கம், சந்தோஷ் வெள்ளி பதக்கம், சூர்யா வெண்கலம் பதக்கம், ஜீவா வெண்கலம் பதக்கம், ஹரிஹரனன் வெண்கலம் பதக்கம், சஞ்சய் குமார் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.
பயிற்சியாளர் கிருஷ் ரத்தன் தலைமையில் சென்றனர். இவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலர் ஜெயேந்திரன் வாழ்த்து கூறினர்.
- சுகாதாரத்தை கடைபிடிக்கும் அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு மாதந்தோறும் பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
- ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்க ளிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சானிடேசன் பர்ஸ்ட் இணைந்து அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார வங்கிகள் (Soap Bank) வழங்குதல் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கி னார். தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்க ளுக்கு சுகாதார வங்கிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகளை வழங்கினர்.
பின்னர் அமைச்சர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி, சுகா தாரம் ஆகிய 2-ம் 2 கண்களாக பாவித்து, கல்வியையும், சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழிமுறையாகும். சுகாதார வங்கிகளில், உங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார பெட்டகத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.
எல்லா கை கழுவும் இடங்களிலும் எப்போதும் சோப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் பொருட்கள் உபயோகித்துக் குறையும் பொழுது அவற்றை மீண்டும் நிரப்பும் முயற்சியில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும்.
குழந்தைகளின் பிறந்த நாட்கள் போன்றவற்றில் அவர்களை வங்கியில் ஒரு சோப்பு கட்டி சேர்க்க வைக்கலாம். குழந்தைகள் தினம், கை கழுவும் தினம், போன்ற சிறப்பு நாட்களில் அங்கன் வாடிகள், பள்ளிகளே சோப்பு வங்கிகளை மீண்டும் நிரப்பலாம்.
ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் கை கழுவுதலின் முக்கியத் துவத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் கற்றுக் கொள்வார்கள். சுகாதார வங்கியிலுள்ள பொருட்களுக்கான கணக்கீடு அங்கன்வாடி பணியாளர் அல்லது பள்ளியாக இருப்பின் இரு மூத்த மாணவர்களால் பதிவு செய்யப்படும்.
கை கழுவ வழங்கப்படும் சோப்புகளும், பெறப்பட்ட சோப்புகளும் கணக்கு வைக்கப்படும். மேலும், கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், படங்கள் ஆகியவற்றை சேர்க்கலாம்.
சுகாதார வங்கி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளுக்கு சானிடேசன் பர்ஸ்ட் மூலமாக மாதந் தோறும் பரிசுகளும், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
- சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபு கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.
- புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ் இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கொரோனா தொற்று விடுமுறையில் ஏழை, எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் இணைந்து பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, புளியாட்டம், வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், தீயணைப்பத்துறை அலுவலர் ரமேஷ், அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர்.சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.
- 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.
- கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் காமராஜர் தெருவில் விழிப்புணர்வு கோல போட்டி நடைபெற்றது.
இதில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.
இதையடுத்து கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 39-வது வார்டு கவுன்சிலர் எம்.உஷா பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜான்சன், எழில், பிரபு தி.மு.க வட்ட செயலாளர், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
- கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4607 குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி செயலாளர் அசோகன் மற்றும் கூட்டுறவுசங்க துணை தலைவர் செந்தில் இயக்குனர் மதியழகன், சிங்காரவேலு மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராமநாதன், வீரமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
இதே போல் வாய்மேடு, அங்காடியில் மாவட்ட தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
இதே போல் தகட்டூர், தாணிக்கோட்டகம் கருப்பம்புலம் ஆகிய ஊராட்சிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தகட்டூர்கூட்டுறவு சங்க தலைவர் நெடுஞ்செ ழியன்கூட்டுறவு சங்க செயலாளர்கள் மதியழகன் தாணிகோட்டகம் தெட்ச ணமூர்த்தி கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- மாநில அளவிலான கலைத்திருவிழாவில் காஞ்சிரங்கால் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 2-ம் பரிசு வழங்கப்பட்டது.
- இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று 2-ம் பரிசை வென்று திரும்பினர்.
அவர்களுக்கு கிராம பொதுமக்கள் சார்பிலும், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திரு விழா நடத்தப்பட்டு, இதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கையை அடுத் துள்ள காஞ்சிரங்கால் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்று கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய நடனமான கரகம், காவடி, சிலம்பம், பறையிசை, கொம்புவாத்தியம் உள்ளிட்டவைகளை இசைத்து மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தனர். அதற்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேரு விளை யாட்டு அரங்கில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஆசிரியர்கள், கிராம பொது மக்கள், வரவேற்றனர்.
சென்னையில் நடந்த கலைத்திருவிழாவில் 2-ம் பரிசு பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளை காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
- ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது.
அனுப்பர்பாளையம்:
தமிழா் பண்பாடு கலாசாரப் பேரவை சாா்பில் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் கலாசாரப் பெரு விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுப் பொங்கல் வைத்து கும்மியாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதையடுத்து ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கலைஞா்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது.
- முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.டி. சிவகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி சேர்மன் வயணப்பெருமாள், ராமமூர்த்தி, கணேசன், அசோகன், செல்வகுமார், பெருமாள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் அய்யாசாமி வரவேற்றார். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி உதவி சேர்மன் வயணப் பெருமாள் பரிசு வழங்கி பாராட்டினார். விளையாட்டுப் போட்டியில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் தாசில்தார் சிவகுமார், டி.எஸ்.பி. சின்னகண்ணு, பள்ளியின் பொருளாளர் எஸ்.முத்து முருகன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் காந்தி ராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முன்னாள் என்.சி.சி. அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், கல்விக்குழு உறுப்பினர்கள் மணிக்குமார், பாண்டி குமரன், நாகராஜன், மாதவன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் டி.ரவீந்திரன் நன்றி கூறினார்.