search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gnaynambigai"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
    • இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.

    ஆந்திராவில் சித்தூருக்குப் பக்கத்தில், திருப்பதி செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களுக்கெல்லாம் இறைவன் தானே அருள்பாலிக்கும் வகையில் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் காவிரி நதியின் தெற்கு பக்கத்தில் காளஹஸ்தீஸ்வரராக திருக்கோவில் கொண்டிருக்கிறார்.

    இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயு சேத்திரம் என்று அழைக்கப்படும் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

    இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.

    யாருக்கு வெகு நாட்களாக கடுமையான ஜுரம் அடிக்கிறதோ என்ன மருந்து, மாத்திரை கொடுத்தாலும் நிற்கவில்லையோ, டாக்டர்களாலும் கைவிடப்பட்டாலும் பரவாயில்லை.

    அவர்களை சேர்ந்தவர்கள் இந்த சன்னதிக்கு வந்து சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசியால் சாதம் செய்து நிவேதனம் செய்து, மிளகு ரசம், பருப்புத் துவையல் மற்றும் ஜுரகேஸ்வரருக்கு நைவேத்தியமாக செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.

    இது இன்று வரை நடக்கின்ற அதிசயம்.

    ×