search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golden eyes"

    • அரியலூர் மாவட்டத்தில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன
    • கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக 2021-22ஆம் ஆண்டில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திட உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து,கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை கலெக்டர் வழங்கி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 44 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை 9 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்ட காலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.14.76 இலட்சம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் நீலகண்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ×