என் மலர்
நீங்கள் தேடியது "goods"
- 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த பணம் திருட்டு.
- இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருட்டு.
பேராவூரணி:
பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி கடையில் உள்ள பொருட்களை திருடி உள்ளனர். மேலும், 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருடி சென்றது தெரியவந்தது.
முகத்தை துணியால் மூடிய நிலையில் திருடிய நபர் பச்சை கலர் டி சர்ட் மற்றும் கருப்பு கலர் டிராயர் அணிந்து இருந்தார்.
இது பற்றி மன்சூர் அலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம்.
- தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை.
திருப்பூர்:
வணிக வரித்துறை சார்பில் பறக்கும் படை அமைத்துள்ளதால் தொழில் துறையினர் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையில் இருந்து வேறு தொழிற்சாலைக்கு ஜாப் ஒர்க் செய்ய பொருட்கள் எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறை அமல்படுத்திய பின், ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்களில், வணிக வரித்துறையினரின் நேரடி சோதனை முறை முற்றுப்பெற்றது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பில் இல்லாமல் வணிகம் இல்லை என்ற நிலை உருவானது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இம்முறையால் வரி விதிப்பில் இருந்த பல்வேறு சிக்கல்கள் தீர்வுக்கு வந்தன. இச்சூழலில், தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படையினரால் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதனையிட்டு, அபராதம் விதிக்க முடியும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும், 339 சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படையை வழிநடத்த, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையால், தொழில்துறையினர் மிரட்சியில் உள்ளனர். ஏனெனில், பொருட்களை தொழிற்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்ல ஜி.எஸ்.டி., பில் தேவை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ வே பில் தேவை. அவ்வாறு பில் இல்லாமல் பொருட்களை எடுத்துச் சென்றால், கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் விதிப்பால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
சிறிய தவறுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 15 நாட்களில் பல லட்சம் ரூபாய் அபராதமாகவும், முன் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர், ேகாவை தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர்.
- அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எருக்கூரில் உள்ள ரேசன் கடையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ரேசன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மற்றும் அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்றும், அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப எடை அளவு சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி நிருபர்களிடம் கூறுகையில்:-
முதல்-அமைச்சர் ஆலோசனைபடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாதம் ஒரு முறை எல்லா துறைகளிலும் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி, ரேஷன்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மணிகண்டன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- அத்தியாவசிய பொருட்களான தேங்காய் எண்ணெய், சீயாக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
- இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை அமைந்துள்ள அனுபவம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என் விஜயராகவன், தலைமையில், மாவட்ட ஆலோசகர் பழனிவேல் முன்னிலையில் வேஷ்டி, சர்ட், பனியன், துண்டுகள், மருத்துவ பொருட்கள், வலி நிவாரணி தைலங்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், தேங்காய் எண்ணெய், சீயாக்காய், ஷாம்பு, துணிசோப், குளியல் சோப், பற்பசை, பிரஷ், உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழங்கினர்
இந்நிகழ்வில்.மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் திருமலை ஐய்யப்பன், மாவட்ட மீனவரனி, தலைவர் ராஜீ மாவட்ட மகளிரணி செயலாளர், காணிக்கை மேரி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர், மாரியம்மாள் ஒன்றிய மீனவரணி தலைவர், சூர்ய மூர்த்தி திருமருகல் ஒன்றிய இணைச்செயலாளர், சந்தோஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த பில்லாளி ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
பின் 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 20 மாதம் சிறப்பாக நடத்தி வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
- இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
சேலம்:
சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.
இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.
இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
கவுன்சிலர் மீது வழக்கு
இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாட்டு பொருட்களை காண்பித்து அதில் விளையாடுவது குறித்து விளக்கி கூறினர்.
- பக்கோடா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டன.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் பள்ளியில் டிவாஸ் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடைபெற்றது.
இந்த பொருட்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார்.
கல்யாணசுந்தரம் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், திவாஸ் ரோட்டரி சங்க மண்டல துணை கவர்னர் நாராயணன், பள்ளி நிர்வாக தலைவர் அருணபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
திவாஸ் ரோட்டரி சங்கம் தலைவி ரேவதி வேணுகோபாலன், செயலாளர் செல்வவள்ளி சந்திரசேகரன், சாசன தலைவி ஆனந்தி முரளி ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையாடும் வகையில் அமைக்க ப்பட்டிருந்த ராட்டினம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்களை காண்பித்து அதில் விளையாடுவது குறித்து விளக்கி கூறினர்.
இதில் மாற்று திறனாளி மாணவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு டெல்லி அப்பளம், காலிபிளவர் பக்கோடா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டன. மதியம் பல வகையான அரிசி சாதம் உணவாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான மாற்று திறனாளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது.
- திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என 5 கடைகள் செயல்பட்டு வருகிறது .ஒரு கடை காலியாக உள்ளது.
இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் .இதில் மளிகை கடையில் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
இன்று காலை கடையை திறக்க உரிமையாளர்கள் வந்த போது அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது .
இதனையடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருமங்கலம் அருகே சாலையோர சருகுகளில் ஏற்பட்ட தீ குடியிருப்பு பகுதியில் பரவியது.
- இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம்
திருமங்கலம் - மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தரிசு நிலங்கள் உள்ளன.
தரிசு நிலத்தில் கிடந்த காய்ந்த சருகுகளில் நேற்று இரவு திடீரென்று தீப் பிடித்தது. மளமளவென பரவிய தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதி வரை பரவியது. இதனால் பொது மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் ஆர்.ஐ. அருண், வடகரை வி.ஏ.ஓ.ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
- நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.
திருப்பூர் :
உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின ஒருங்கிணைப்பு விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வினீத் வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- ஒவ்வொரு பொருளையும் விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோரே. கடைக்காரர்கள், நமக்கு சேவையளிக்கும் அனைத்து விற்பனை மையங்கள் மூலமாகவும் இன்னமும் பலவற்றில் நமக்கு தேவையான பொருட்களை சரியானமுறையில் கவனித்து வாங்காமலும், பட்டியல்களை சரிபார்க்காமலும் வாங்க மறந்து விடுகிறோம். இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் நுகர்வோர்உரிமைகளை காத்திடவும், நுகர்வோர் உரிமைகளை நிலைநாட்ட 1962ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் தோற்றுவிக்கப்பட்டதே உலக நுகர்வோர் தினமாகும்.பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்வதோடு இதனை மற்றவர்களும் அறிந்து கொண்டு பயன்பெறுகின்ற வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
நுகர்வோர் ஒருபொருளை வாங்கும் போது பதிவுச்சான்று- உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். அதன் உண்மை தன்மையை அறிந்து, அப்பொருளின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும். வாங்குகின்ற பொருட்களுக்கான விலை பட்டியலை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றது.
இந்நீதிமன்றங்களில் நுகர்வோர் தங்களுக்கு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம்.வாங்கும் பொருட்களில் தரமற்ற உணவு பொருள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் முழுமையாக அறிந்து அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்திட அனைவரும் முன்வர வேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனம் மூலம் நுகர்வோர் மேம்பாட்டிற்கான ஒரு கருவி BIS CARE APP-மூலம் முத்திரையுள்ள தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கநகைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். தயரிப்பின் தரம் அல்லது ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகாராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலை வகித்தார். விழாவில் நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளிடையே இவ்விழாக்களின் தலைப்பின் அடிப்படையில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்பேட்டிகள் நடத்தப்பட்டுஅப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ. 1,000, மூன்றாம் பரிசு ரூ.500 ஐ கலெக்டர் வினீத் வழங்கினார்.
விழாவில் கூட்டுறவுத்துறை, இந்திய தேசிய தர நிர்ணயம் , மருத்துவ நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபகழகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் ஆகியவற்றின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்திய தேசிய தர நிலை கட்டுப்பாட்டு அலுவலரால் பொருட்களில் உள்ள ஐ.எஸ்.ஐ ., முத்திரையினை எவ்வாறு சரிபார்க்கப்பட வேண்டும் என விளக்கவுரையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகாராஜ் , உணவுபாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாவட்ட வழங்கல் அலுவலரின்நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
- இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பு நிறுத்தினார். அப்போது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்றார்.
பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
இவை அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
- விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
உடுமலை :
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, ஈசல்திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
அதற்குத் தேவையான இடுபொருட்களை வாங்கவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அடிவாரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. வனப்பகுதியில் பாதை இல்லாததால் சில சமயத்தில் விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈசல்திட்டை சேர்ந்த சின்னக்கா என்பவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். இத்திபாழி என்ற இடத்தில் சென்றபோது புதரில் மறைந்து இருந்த யானை ஒன்று திடீரென வெளிப்பட்டது. இதனால் அச்சமடைந்த சின்னக்கா தப்பி ஓட முயற்சித்த போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.
அதைத் தொடர்ந்து உடன் வந்த மலைவாழ் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜல்லிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இது குறித்து உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சின்னக்காவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே மலைவாழ் மக்கள் சென்று வரும் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றுவனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் மின்கம்பங்களினால் யானைகள் இறப்பதை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை தாலுகாவில், வேட்டைக்காரன்புதுார், அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, காளியாபுரம், கோட்டூர், பெரியபோது ஆகிய கிராமங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களில் வட்ட நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வனவர் அல்லது வனக்காப்பாளர், போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இதில் அதிகாரிகள் கூறியதாவது:-
ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளாக அறிவிக்கப்பட்ட வனங்களில் இருந்து, ஐந்து கி.மீ., வரையுள்ள பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கண்டறியப்படும் மின்கம்பங்களின் அச்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை கண்டறியப்பட வேண்டும்.
பழுதடைந்த மின்கம்பங்கள், உயரம் குறைவாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் வனங்களுக்குள் செல்லும் மின்கம்பங்கள் என வகைப்பாடு செய்து சம்பந்தப்பட்ட புலப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டும். கண்டறியப்பட்ட மின்கம்பங்களை மின்வாரியத்தின் வாயிலாக அவற்றின் தன்மைக்கேற்ப அகற்ற அல்லது மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனப்பகுதிக்குள் செல்லும் மின்கம்பிகளை உயர் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மின்கம்பங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தல், முள்வேலி அமைத்தல் போன்ற பணிகள் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு மின்கம்பிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயர்ரக காப்பு கம்பிகள் மற்றும் உரையிடப்பட்ட கம்பிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மின்கம்பங்களினால் மின்சாரம் கொண்டு செல்வதற்கு பதிலாக மாற்று வழிமுறை அல்லது மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.கிராமங்களில் வட்ட அளவில் தாசில்தார்களும், குறு வட்ட அளவில் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலும் பணிகளை ஒருவாரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடித்ததை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதி செய்து கோவை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.