search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus broke down"

    • பஸ் பழுதாகி நின்றதால், பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
    • கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

     கூடலூர்,

    கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கேரள மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கர்நாடகாவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வாகனங்கள் கூடலூர்-முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகாவுக்கு சென்று திரும்புகிறது. இந்தநிலையில் நேற்று திருச்சூரில் இருந்து 65 பயணிகளுடன் மைசூருவுக்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா செல்லும் சாலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் பஸ் திடீரென பழுதடைந்து நடுக்காட்டில் நின்றது.

    இதனால் பழுதை சரிசெய்யும் பணியில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதனால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் பயணிகளை வேறு பஸ்களில் அனுப்புவதற்கான நடவடிக்கையில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். மேலும் நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வர வாய்ப்பு இருந்ததால், கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்கள், பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் பஸ் தாமதமானது. தற்போது முதுமலை வனப்பகுதிக்குள் பழுதாகி நின்று விட்டதால் குழந்தைகளுடன் பரிதவிக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர். இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரள பஸ்களில் பயணிகள் மைசூருவுக்கு மிக தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • பழுதாகி நின்ற இடம், காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்து பஸ்சின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலையில் இருந்து ஆடலூர், கே.சி. பட்டி, குப்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாக வத்தலகுண்டுவுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பன்றிமலையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். தாண்டிக்குடி-பண்ணைக்காடு இடையே எதிரொலிக்கும்பாறை பகுதியில் வந்தபோது அந்த பஸ் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது.

    இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர். மேலும் பஸ் பழுதாகி நின்ற இடம், காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து பஸ்சில் பழுது ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே பார்க்கக்கூடாதா என்று கூறி பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். மேலும் பஸ்சின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மாற்று பஸ்சுக்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்களில் லிப்ட் கேட்டு வத்தலக்குண்டுவுக்கு சென்றனர்.

    எனவே மலைக்கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தரமான பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×