என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » govindaraja swamy temple
நீங்கள் தேடியது "govindaraja swamy temple"
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி உதயபிரகாஷ்ரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ்ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி உதயபிரகாஷ்ரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ்ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X