search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govindaraja swamy temple"

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி உதயபிரகாஷ்ரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ்ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    ×