என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gutka"

    • கரூர் மாவட்டத்தில் குட்கா விற்ற 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
    • புகையிலை உள்ளிட்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் குட்கா விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக குட்கா பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கரூர் மாநகரம், வெங்க மேடு,பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, வெள்ளியணை, சின்னதாராபுரம், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பாலவிடுதி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.அப்போது, பெட்டிக்கடை, மளிகைகடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர் மீது போலீ சார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட் டவர்கள் அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    • சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    430 கிலோ குட்கா

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 430 கிலோ எடை கொண்ட அந்த குட்காவின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து அந்த காரை குட்காவுடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த பர்வீன் (24), தயாராம் மாலி (20) என்பது தெரிய வந்தது.

    தொடர் விசாரணை

    மேலும் அவர்கள் குட்காவை பெங்களூர் மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு கடத்தி சென்றதும், வாகன சோனையில் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது. ெதாடர்ந்து அவ ர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தளவாபாளையத்திடில் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • குட்கா விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு குளிர்பான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளவாபாளையம் பகுதியில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
    • மளிகை கடையில் இருந்து ஏராளமான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ். சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த தளவாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கரிகாலன் (52) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
    • 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல்

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முத்துகிருஷ்ணன் (வயது 44), அப்துல்மஜீது (70), ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி சோமரசம்பேட்டையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடைகாரர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

    ராம்ஜிநகர்,

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், நாச்சி குறிச்சி, தாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது அல்லித்துறை அருகே உள்ள சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் சுமார் 6 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து. அல்லித்துறை, சரவணபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாபு (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் டவுன் பழைய வாணியம்பாடி ரோட்டில் உள்ள பெட்டி கடையில், முகமது நபிஸ் (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • ஆண்டிமடத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • போலீசாரின் திடீர் ஆய்வில் சிக்கியது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதிகளில் பெட்டிக்கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பதாக ஆண்டிமடம் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தடை செய்த ஹான்ஸ் 50 பண்டல் கூல் லீவ் 62 பண்டல் விமல் சைடு பாக்கு உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பொருளின் மதிப்பீடு சுமார் ரூ.40 ஆயிரத்திற்கு மேலாக இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீ சார் அறிவழகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகடலி மெயின் ரோட்டில் உள்ள ஒருவரின் கடைக்கு கடத்தியது தெரியவந்தது .

    இதனிடையே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, மணிமாறன் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து பெரம்பூர் காவல் துறையினரிடம் குற்றவா ளிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
    • ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போதுபுதுப்பேட்டை அடுத்த கொத்தி கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டகுட்கா விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து ஜோதிலட்சுமி (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சொகுசு காரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை இடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோத னை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது இடித்த விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை அறிந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்ற னர். பின்னர் அந்த காரை சாத்தூரில் பிடித்து. போலீசார் சோதனை செய்த பொழுது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பி லான குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ் தானை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×