search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H Raja"

    • இந்து அமைப்பினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
    • திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

    காரைக்குடி:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு அருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையைப் பாதுகாப்போம் என இந்து அமைப்பினர் ஒன்றுகூடி இன்று போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீசார் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

    மலையைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லாலாமா? என எச். ராஜா ஆவேசம்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாடு நடத்தப்பட்டது.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி, ""இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

    சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று தெரிவித்தார்.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு நாடு முழுவதும் உள்ள பாஜக, இந்துத்துவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், சனாதன விவகாரத்தில் விரைவிலேயே உதயநிதி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச். ராஜா, "கூடிய விரைவில் எல்லா மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிரா பிடிவாரண்ட் வந்து விடும். சீக்கிரமாகவே ஜெயிலுக்கு போகி விடுவார்.

    சனாதன இந்து தர்மத்தை நீ டெங்கு கொசு மலேரியா கொசு மாதிரி கொன்னுடுவியா? அவ்ளோ திமிரு உங்களுக்கு இருக்கா?

    துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லலாமா? அவர்களை டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிப்பேன்னு பேசுவாரா?

    அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் யார் இந்த சார் ஏன்னு சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. ஆனா இந்து மதத்தை கொசு மாதிரி கொல்லலாம் என்று அவர் பேசலாமா?

    இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 இல் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

    • சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார்.
    • ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வள்ளுவன் சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய அவர், "வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட பார்க்கிறார்கள் என்ற முதல்வரின் கருத்து தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த எச். ராஜா. "சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும்.

    சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.

    திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள்.

    என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள்.

    திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்" என்று தெரிவித்தார்.

    • திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
    • மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சனைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

    கவர்னர் நிகழ்ச்சி நடக்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத்தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவதுபோல் நடந்துள்ளனர். மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.

    திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு ஏதும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    கோவை:

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டார். போராட்டத்தில் கோவை மாநகர் மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி, வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதியை மீறி இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தையொட்டி அங்கு காட்டூர் துணை கமிஷனர் கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    முன்னதாக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவின் ஆட்சி எதிர்க்கட்சிகள் மற்றும் ராணுவத்தின் சதியால் அகற்றப்பட்டுள்ளது. அங்கு புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    சிறுபான்மை மக்களான இந்துக்கள் அதிகளவில் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள், பொருட்கள், கோவில்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இஸ்கான் நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். அவரை ஜாமினில் எடுக்க முயன்ற வக்கீல் கொல்லப்பட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அண்டை நாடான வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களை ராகுல் காந்தியோ, மம்தா பானர்ஜியோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் வங்காள தேச இந்துக்களின் பாதுகாப்புக்காக போராட அனுமதி கேட்டோம். அதற்கும் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதேபோல் பொள்ளாச்சியில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் குண்டுக்கட்டாக ஏற்றி கைது செய்தனர்.

    30 பெண்கள் உள்பட மொத்தம் 155 பேர் கைதானார்கள். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது.
    • இரு வழக்குகளில் குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்தது, கனிமொழி எம்.பி.க்கு எதிராக விமர்சனம் செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்த வழக்குகளில் விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது இருந்தது.

    இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை ஜி.ஜெயவேல் கூறினார். அதில், எச்.ராஜாவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு தலா 6 மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    மேலும், எச்.ராஜாவுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்ககி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் எச்.ராஜா உடனடியாக சிறைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

    • கடந்த 7-ந்தேதி பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 7-ந்தேதி பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் தேசிய விரோதிகள். அவர்கள் 2 பேரையும் கண்காணிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விமான நிலைய போலீசார் எச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இருதரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • கஸ்தூரிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.
    • நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

    புதுக்கோட்டை:

    பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் எந்த கட்சியும் எங்களின் ஏ டீம் பி டீம் என்று கூறவில்லை. நாங்கள் அ.தி.மு.க.வை கூட்டணிக்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தால் தான் எடப்பாடி பழனிசாமி எங்களை புறக்கணிக்கிறார் என்ற சொல்ல முடியும்.

    எனினும் எங்களைப் பொறுத்தவரை இங்கு உள்ளவர்கள் யார் என்ன சொன்னாலும் கூட்டணி குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். அப்போது அகில இந்திய தலைமை எங்களிடம் பேசுவார்கள். யாருக்கும் கனவு காண உரிமை உள்ளது அதனை என்னால் தடுக்க முடியுமா?. திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். திராவிடம் என்பது தமிழ் சொல் அல்ல. அது சமஸ்கிருத சொல்.

    தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்களை தான் திராவிடர்கள். அதனை இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது செய்ய முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தாமு. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால் கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர்.

    அவருக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

    திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967-ல் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தி.மு.க. இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை.

    அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் டாக்டர் கத்தி வைத்துக் கொள்ளலாம். நோயாளி கத்தி எடுத்து செல்லலாமா? இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றுபோன அரசாங்கமாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பத்தாயிரத்து 500 ஆசிரியர்கள் போலிகள். கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் ஒரு துறை கூட திறமையாக செயல்படவில்லை.

    எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டத்தான் முடியும். ஆனால் செயல்படுத்த வேண்டியது ஆளும் அரசாங்கம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொய்யான செய்திகளை பரப்பி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.
    • மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.

    தருமபுரி:

    அவதூறு கருத்துக்களை பரப்பும் பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரின் தலைவராக இருந்து வரும் எச்.ராஜா என்பவர் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் குறித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். மேலும், அவர் பொய்யான செய்திகளை பரப்பி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மீது தேவையற்ற அவதூறு பரப்ப செய்து, மக்களுக்கு இடையில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா செயல்படுகிறார் எனும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    மனு கொடுக்கும் போது மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜீலான், நகர தலைவர் சாதிக், நகர துணை செயலாளர் ஏஜாஸ், முன்னாள் மாவட்ட நிர்வாகி நவுஷாத் ஆகியோர் உடனிருந்தனர். 

    • திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.
    • முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.

    பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் நண்பர் விஜய். அவர் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கார். ஆனால் இந்த தீர்மானங்களை பார்க்கும்போது நீங்கள் திமுகவுடன் சேர்ந்திடலாம் என்று தோன்றுகிறது.

    காரணம், திமுக இத்தனை நாட்களாக சில விஷயங்களை கிளி பிள்ளைப்போல் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அதையே இப்போது விஜய் சொல்கிறார். பாஜக சொல்லிக் கொண்டிருப்பதையே அவர் சொல்லி வருகிறார். இதை விரிவாக எடுத்துக்கூற எதுவும் எல்லை.

    திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.

    பாஜகவுக்கு எத்தனை பி டீம்ங்க.. தாங்காது கட்சி. முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.

    விஜய் எப்போ ஒன்றிய அரசு என்று சொன்னாரோ அப்போவே அவர் உங்க சித்தாந்தம்தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.
    • யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருந்தபோதும் கூட்டணி அரசியலில் கூட்டணி கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்துள்ளோம். யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.

    தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினருக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கி மந்திரி சபையில் இடம் அளிப்பது குறித்து பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்.

    சினிமாவில் பிரகாசித்து விட்டு அரசியலில் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இதனை மக்கள் பல முறை உணர்த்தி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிடி தமிழ் நிகழ்ச்சியில் திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.

    விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.

    இந்நிலையில், நாட்டின் பிரதமரே திராவிடர்தான் என்று பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, "திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. தர் என்றால் சமஸ்கிருதத்தில் மரம் என்று அர்த்தம். தக்காண பீடபூமிக்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் 56 தேசங்கள் இருந்தது. அங்கு 2 பெரிய நிலப்பரப்புகள் இருந்தது. அதற்கு பெயர் பஞ்ச திராவிடம். இதில் முதல் மாநிலமே கூர்ஜரம் அதாவது குஜராத். அதனால் இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ×