search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harvest"

    • குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
    • சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    குண்டடம்:

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

    இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-

    குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.

    இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.

    இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.

    நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது.
    • விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பூதலூர் அருகே உள்ள கங்கை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் மற்றும் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    வெண்ணாறு கோட்டம் பூதலூரில் ஆனந்த காவிரி கிளையான புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது.

    இதனால் விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர். எனவே மேற்படி வாய்க்காலில் மதகு அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    • காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதியில் சின்னவெங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர்.

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பா சனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.நாற்று நடவு முறையை பின்பற்றுகின்றனர். பிற காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது. எனவே அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த தை பட்டத்திலும், பின்பட்டத்தி லும் நடவு செய்யப்பட்ட சின்னவெ ங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிக ரித்து விட்டது.நடப்பு சீசனில் போதிய மழை இல்லாததால் பயிரின் வளர்ச்சி பாதித்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கிலோ 20 - 30 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.எனவே அறுவடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மகசூல் குறைந்துள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை.
    • கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான, புதுப்பள்ளி, காமேஸ்வரம், தாண்டவமூர்த்திகாடு, பூவைத் தேடி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் வேர்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 105 நாட்கள் பயிரான இது, வருடத்திற்கு 3 முறை பயிர் செய்யப்படுகின்றது. தற்போது, பயிர் செய்யப்பட்ட வேர்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் பருவம் தவறிய கனமழை பெய்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழையின் காரணமாக கடலையின் வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி அழுகி கடலையின் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு செடிக்கு 15 முதல் 20 கடலை பருப்புகள் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது 4 அல்லது 3 என்ற அளவில் உள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு 10000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து உள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் நிலக்கடலையை கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நிலக்கடலைக்கு உரிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
    • பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-

    பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.

    இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக உளுந்து சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • கிலோ ரூ.70க்கு விற்பனையால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்துள்ளது

    கரூர், 

    புனவாசிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து அறுவடை பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, புனவாசிப் பட்டி, கொம்பாடிப்பட்டி, நரசிங்கபுரம், மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர். தற்போது கிணற்று நீர் பாசன முறையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.இதில் உளுந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராகின. இதையடுத்து அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உளுந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. இதன் மூலம் விவசாயி களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.

    • விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • காட்டுபன்றிகள் தொடர்ந்து இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகன் (41). விவசாயி.

    இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் பச்சையாறு அணைக்கு செல்லும் வழியில் பாழம்பத்து பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் இவரது விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 1 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை நாசம் செய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டுபன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனைதொடர்ந்து விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • வாய்க்கால் பாசனத்தில் அமோகம்

    கரூர், 

    கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக் குளம் கிராம பகுதியில், நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவக்குளம், பிச்சம்பட்டி கிராம பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்தனர். இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து, தற்போது அறுவடை பணிகளில்விவ சாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த நல் வயல்கள் கட்டளை வாய்க்காலில் இருந்து பாசனம் பெறுகின்றன. இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து தற்போது அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கூலி ஆட்கள் பற்றாக் குறை காரணமாக நெல் அறுவடை இயந்திரம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    • பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
    • 60 சதவீத சம்பா அறுவடை பணிகள் நிறைவு.

    பாபநாசம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் ஆணை முன்கூட்டியே திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறையின் மூலம் முக்கிய பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வார பட்டது. தட்டுப்பா டின்றி தேவையான விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.

    போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி, சாகுபடி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழைக்கு பிறகு தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

    இதுவரை சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு சம்பா அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளது.

    இம்மாத இறுதிக்குள் சம்பா அறுவடை பணிகள் முடிவு நிலை எட்டும் என எதிர்பார்க்க படுகிறது.

    • விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேலகுன்னத்தூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

    தற்போது அந்த நெற்ப யிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மேலகுன்னத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை நாசம் செய்தது.

    இன்று காலை வயல்பகுதிக்கு சென்ற விவசாயிகள் நாசமான பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, நாங்கள் கஷ்டப்பட்டு அதிகளவு நிலத்தில் நெல் நடவு செய்துள்ளோம்.

    விவசாயிகள் கோரிக்கை

    தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. ஆனால் காட்டுப்பன்றிகள் புகுந்து அதனை நாசம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். 

    • இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
    • பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை முறைப்படுத்தப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 450 மற்றும் டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் அதிகமான வாடகை வசூவிப்பதாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மான்யத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல் (மாவட்ட வட்டார வாரியாக உரிமையாளர் பெயர், முகவரி, எந்திர வகை மற்றும் செல்போன் எண்னுடன்) தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைகு மிகாமல் செலுத்தி பயன்பெறலாம்.

    மேலும், வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும் டயர் எடப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

    ேமலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் வட்டாட்சியர்கள் வேளாண் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை நாகப்பட்டினம் செயற்பொறியாளர் தொலைபேசி எண். 94420 49591, உதவி செயற்பொறியாளர் தொலைபேசி எண் 94432 77456 உதவிப் பொறியாளர் (வே.பொ), தொலைபேசி எண் 94452 40064) ஆகியோறை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×