search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hasta Mudra"

    • மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது.
    • உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.

    ஆரோக்கியமாக இருக்க, நல்ல மற்றும் போதுமான தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை தவிர, இரவு நேரங்களில் மொபைலில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதால் தூக்கமின்மை பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. நல்ல தூக்கம் இல்லாததால் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

    நல்ல உறக்கத்திற்கு பல யோகா முத்திரைகள் உள்ளன. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. தூக்கமின்மையில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஹக்கினி முத்ராவைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    ஹாகினி முத்ரா என்பது ஹஸ்த முத்ரா. இது கைகளால் செய்யப்படுகிறது. இதன் மூலம், உடலின் ஐந்து கூறுகளான காற்று, நெருப்பு, நீர், பூமி மற்றும் ஆகாயம் ஆகியவை சமநிலையில் இருக்கும். ஐந்து விரல்கள் இந்த ஐந்து உறுப்புகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

    இதில், ஆள்காட்டி விரல் காற்றின் குறியீடாகவும், நடுவிரல் வானமாகவும், மோதிர விரல் பூமியாகவும், கட்டை விரலை நெருப்பாகவும், சுண்டு விரை தண்ணீரையும் குறிக்கும். இந்த ஆசனத்தை இரு கைகளாலும் செய்தால், அக்குபிரஷர் ஏற்படுகிறது. இது உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை பராமரிக்கிறது.

    ஹக்கினி முத்ராவின் செய்முறை

    முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பிறகு கண்களை மூடி இரண்டு கண்களுக்கும் இடையில் கவனம் செலுத்த வேண்டும்.

    இரண்டு கைகளையும் தொப்புளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். இப்போது உங்கள் இரு கைகளின் விரல் நுனிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.

    நான்கு விரல்களும் முன்னோக்கி இருக்க வேண்டும் மற்றும் கட்டைவிரல் மேல்நோக்கி இருக்க வேண்டும்.

    விரல் நுனியில் லேசான அழுத்தத்தைப் பயன்படுத்துங்கள். அடுத்து, ஆழமான மற்றும் நீண்ட மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

    இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். இதை காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகும், இரவு தூங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பும் செய்ய வேண்டும்.

    ஹக்கினி முத்ராவின் நன்மைகள்

    * நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

    * ரத்த ஓட்டம் மேம்படுகிறது, இதன் காரணமாக ஆக்ஸிஜன் மூளையை அடைகிறது.

    * நினைவாற்றல், செறிவு மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது.

    * மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் குறையும்.

    * இந்த முத்ரா உடலின் தோஷங்களை (வட, பித்த மற்றும் கபா) சமநிலைப்படுத்துகிறது.

    * இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

    ×