என் மலர்
நீங்கள் தேடியது "Headmaster"
- வாடிப்பட்டி அருகே பள்ளி தலைமை தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
- முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமாருக்குவாடிப்பட்டி ஒன்றிய அனைத்து உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு சோழவந்தான் எபினேசர் துரை ராஜ் தலைமை தாங்கினார். கென்னடி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் வரவேற்றார்.
இந்த விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, ஜெயசித்ரா, ராணி குணசீலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வாடிப்பட்டி அனைத்து உதவி பெறும் பள்ளிகள்சார்பாக தலைமையாசிரியர் ராபின்சன்செல்வகுமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
- பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார்.
- பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார்.
அவிநாசி :
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியின் பின்புறம் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார். எனவே குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கண்டித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.
அப்போது மாணவர்களை தாக்கிய நபருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெரித்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.
இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.
இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. #tamilnews
ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் என்பவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் அன்பழகனை, வேடந்தவாடி அரசு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், தங்களது தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியில் அங்கு திரண்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அருட் செல்வன், உதவி தொடக்க கல்வி அலுவலர் தேன்மொழி ஆகியோர் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
அப்போது மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கண்ணீர்விட்டு அழுதனர்.
தலைமை ஆசிரியர் அன்பழகன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்.
அவர் வந்த பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனவே அவரை மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
வாணாபுரம் அருகே காட்டாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உடற்கல்வி ஆசிரியராக சிவப்பிரகாசம் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரியகுளத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனை கண்டித்தும் சிவப்பிரகாசத்தை இதே பள்ளியில் மீண்டும் உடற்கல்வி ஆசிரியராக பணியமர்த்தக் கோரி மாணவ-மாணவிகள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினர். இதில் மாணவ, மாணவிகள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் கலைந்து வகுப்பிற்கு சென்றனர். #tamilnews
ராசிபுரம் டவுன் வி.நகர்-7 பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 56). இவர் புதுச்சத்திரம் அருகேயுள்ள காரைக் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கோகிலஸ்ரீ. இவர் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார். இவர் தற்போது தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.
தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் மகளை பார்த்து வர கடந்த 5-ந் தேதி சென்னைக்கு சென்றனர். நேற்று காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பீரோ திறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுற்றுச்சுவர் வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட், 2 பவுன் 2 மோதிரங்கள், ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள் கவரிங் நகைகளை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நகைகள் திருடிய பீரோவின் அருகில் திறந்த நிலையில் இருந்த இன்னொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை ராசிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமை ஆசிரியரின் வீடு குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இடம். ஆனாலும் திருடர்கள் சாமர்த்தியமாக உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்று உள்ளனர். வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் திருடர்களை அடையாளம் காண முடியவில்லை. இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை போலீசார் தெரிவித்தும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் கீ.த.பச்சையப்பன்(வயது 85). இவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு சிவில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இன்று வந்தார்.
மாடியில் உள்ள கோர்ட்டுக்கு செல்ல நடைபடியில் நடந்து சென்றார். அவருடன் அவரது மகனும் உடன் சென்றார். அப்போது திடீரென பச்சையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில், அவரது மகன் தூக்கிச் சென்றார். #tamilnews
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டு கோணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு (வயது51) என்பவர் இருந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் 1077 என்ற அவசர எண்ணுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, மாவட்ட கல்வி அதிகாரியான குழந்தைவேலுவை விசாரிக்க உத்தரவிட்டார்.
நேற்று பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார கல்வி அதிகாரி, உமாதேவி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் 35 மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும், மாணவிகளின் பெற்றோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் பாபு (வயது51) மாணவிகள் சிலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் வகுப்பறையில் புகையிலை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய குழுவினர் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமியிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் பாபுவை சஸ்பெண்ட் செய்ய அவர் உத்தரவிட்டார்.
இது பற்றி முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-
எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரின் நடவடிக்கை குறித்து மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் பாலியல் தொல்லையில் அவர் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று அதற்கான கடிதம் தலைமை ஆசிரியர் பாபுவிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
தருமபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளப்பட்டி, நத்தஅள்ளி, கோனப்பள்ளம், பழைய இண்டூர் உள்பட சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தயானந்த் என்பவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்.
தயானந்த் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் செந்தில் குமார், கோபால கிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சரியாக பாடம் நடத்துவது இல்லை என்றும், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும்படி திட்டுவதாகவும், மாணவர்களை தடியால் கடுமையாக தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாதத்திற்கு ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடத்துவது கிடையாது. இதனால் இன்று மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி முன்பு குவிந்தனர்.
இண்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியர்கள் மீதான புகார்களுக்கு வருகிற திங்கட்கிழமையன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் நடத்தபடும் என்றும், அங்கு தங்களது புகார்களை தெரிவித்தால், புகாரின்பேரில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி வகுப்பறைக்குள் சென்றனர். #tamilnews
காட்பாடி சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ராமன் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சேர்க்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை, உதவி தலைமை ஆசிரியர் மிரட்டி வருகிறார். உதவி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் ஆசிரியர்கள் 7 பேர் உள்ளனர்.
இவர்கள், அனைவரும் தலைமை ஆசிரியரின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை. மாறாக எதிர் மறையான செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
எனவே, உதவி தலைமை ஆசிரியர் தலைமையிலான 7 ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.