search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health care providers advise"

    • கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது.
    • பொது இடங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் இணை நோய் பாதிப்பு உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து சுகாதா ரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருப்பினும் முன்னெச்சரி க்கையாக தயார் நிலையில் இருக்கிறோம். கொரோனா பரவல் இருப்பதால், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, எச்ஐவி, கேன்சர், ரேடியோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது, தடுப்பூசி செலுத்தியவ ர்களையும் கொரோனா பாதித்து வருகிறது.

    எனவே, வயதானவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிகம் கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்லும் போதும், பொதுஇட ங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பு மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சு திணறல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×