என் மலர்
நீங்கள் தேடியது "hiking"
- உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
- இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
இந்த நடை பயணத்தை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.
குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அலவாய்ப்பட்டி ஊராட்சி வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
- கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டி மேடு ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படி உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு தூய்மை நடைபயணம் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆர்வலர்கள்,ஞாண சேகரன், கல்வி மேலா ண்மைக் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) சிவக்குமார் பேரணியை தொடக்கிவைத்து திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது, அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்கவும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தவும் தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பாக கையாள்வது, நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது, நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது, கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேணடும் என வலியுறுத்தினார்.
முன்னதாக முழு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் தூய்மைக் காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
பேரணியில் மாணவர்கள் பதாகை ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, சாலைத் தெருவழியாக பள்ளி வளாகம் சென்றடைந்தனர்.
நிகழ்வில் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் செல்வம், ரகமத்துல்லா மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேஸ் குட்டி, அய்யப்பன், ராஜா, முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
- இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.
- நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது.
- வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. இதற்காக புதிய அலகு அமைக்கப்பட உள்ளது. அதன்படி என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது,
எனவே மாவட்ட அதிகாரிகள் என்.எல்.சி.க்கு நிலத்தை கையககப்படுத்த வந்தனர். ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கு குடும்பத்துக்கு நிரந்தர வேலைவழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் இதற்கு அரசு செவிமடுக்கவில்லை.
எனவே கிராம மக்களுக்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த கோரியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, இன்றும் , நாளையும் நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆவேசமாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் கங்கைகொண்டான், ,வடக்குவெல்லூர், தென்குத்து, அம்மேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றார். அவருடன் பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சென்றனர்.
- 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயம்.
- முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்னர் வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து வருகிற 18-ந்தேதி காலை 7 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலிருந்து அனைத்து மகளிருக்கான "புடவையில் ஓர் நடைப்பயணம்", பாரம்பரிய உடைகளுக்கான கவுரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக நடத்த இருக்கிறது.
நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைக்கிறார்.
மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மேயர் சண். இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் குழுத்தலைவர் டாக்டர். உஷா நந்தினி, தலைவர் டாக்டர். சோபியா மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
இதில் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கி.மீ நடைபயணமும், 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 7 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கி.மீ தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டையுடன் ரூ. 100 பதிவு கட்டணத்தை இன்று மாலைக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டியன்று பதிவு செய்பவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ. 200 ஆகும்.
மேலும், கல்லூரி மாணவிகளுக்கு பதிவுக்கட்டணம் இல்லை. ஆனால், கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக புடவை அணிந்து வர வேண்டும்.
இதுகுறித்த விபரங்களுக்கு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவடிவு தொலைபேசி எண். 9730669869 மற்றும் புவனா தொலைபேசி எண். 9894866277 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
- அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்
- கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார்
திருச்சி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் பா.ஜ.க.வை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறையூர் குறத்தெருவில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கு நடைபெ்றற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சுரேஷ் முத்துசாமி, முருகன், பார்வதி, அஞ்சுகம். சையது அபுதாகிர், ராஜா, ராஜலிங்கம், அண்ணாதுரை. திராவிட மணி. இப்ராஹிம், முத்துலட்சுமி, கருணாகரன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர், கவுன்சிலர் பைஸ் அகமது, விடுதலை சிறுத்தை கட்சி அருள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹபிபுர் ரஹ்மான், சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் ஞானதேசிகன், தி.க. மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், செல்வகுமார், சிவசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேற்கு பகுதி துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பகுதி செயலாளர்கள் நாகராஜன், இளங்கோ, தில்லைநகர் கண்ணன், காங்கிரஸ் எத்திராஜ், ம.தி.மு.க., பெல் ராஜமாணிக்கம், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், ம.ம.க. இப்ராஹிம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாற்றத்தை நோக்கி என்ற புத்தகத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
அதனை முத்தரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-கம்யூனிஸ்ட் கட்சிகள் தைரியமாக பா.ஜ.க.வை அகற்றுவோம் என்று எதிர்த்து வருகிறது. இதற்கு தி.மு.க.வும் முழு ஆதரவை தரும். மேற்கு தொகுதியில் ஆறு நாட்கள் நடை பயணமாக சென்று மக்கள் மத்தியில் இயக்கத்தை நடத்துகிறார்கள். இதில் எங்கள் கட்சியினர் உறுதுணையாக இருப்பார்கள். இது பயணம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். சமதர்ம சமுதாயம் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய இந்த நடைபயண இயக்கத்திற்கு தி.மு.க. துணை நிற்கும்.இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
- நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைப் பற்றி விழிப்பு ணர்வை ஏற்படுத்துவ தற்காக உலக இரத்த அழுத்த தினம் ஆண்டு தோறும் மே 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பாக ரத்த அழுத்த விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.இனியன், மருத்துவமனையின் மூத்த நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ரமேஷ்பாபு, டாக்டர் அக்சயா இனியன், டாக்டர் கே.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய நடைபயணத்மாதை நகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பொதுமக்கள், மாணவர்கள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைப்பயணமாக புறப்பட்டனர்.
அப்போது நடைப்பயணத்தின் அவசியம் குறித்தும், நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், அதை எவ்வாறு குணப்படுத்துவது (அல்லது) வாழ்கை முறையினால் கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து பொது மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.
இந்த நடைப்பயண மானது தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் வழியாக சுமார் 3 கி.மீ. சென்று மீண்டும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது.
நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவரும் உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாடாக வைக்கப்படும் என்ற எடுத்துக் கொண்டனர்.
நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் சண்.ராமநாதனுக்கு, ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே. இனியன் நினைவு பரிசு வழங்கினார்.
- ஆர்.எஸ்.மங்கலத்தில் இன்று 4-வது நாளாக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.
- பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன்சுந்தர லிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் பிரசார வேனில் அண்ணாமலை சிறிது தூரம் சென்றார். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆகியும் எத்தனை பேருக்கு வேலைகிடைத்தது.
தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு தாமரை மலரவே இந்த நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம் என்றார்.
அப்போது அண்ணா மலை பொதுமக்களிடம் பிரதமர் மோடி ராமநாத புரத்தில் போட்டியிட வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்தவர்கள் ஆமாம் என கோஷமிட்டனர். அதன் பின்னர் பிரசாரத்தை முடித்த அண்ணாமலை ராமநாதபுரத்திற்கு திரும்பி னார்.
ஆர்.எஸ்.மங்கலம்
4-வது நாளான இன்று காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.
பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகி களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார். இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன் பின் ஒன்றிய தலைவர் நர சிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார். இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செய லாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார், மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி.ரமேஷ், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தூவல் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
- அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் பணம் அபேஸ் செய்துள்ளனர்.
- மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.
சிவகங்கை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை ராமேசுவ–ரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கினார். நான்காவது நாளான நேற்று முன்தினம் சிவகங்கை நகர் முழுவதும் நடை பயணம் மேற்கொண் டார்.
அப்போது வீரமாகாளி–யம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற பாதயாத்திரை–யின் போது அங்கு கட்டா–ணிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் சாலையோ–ரம் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரபுவின் டவுசர் பையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பிளே–டால் கிழித்து அபேஸ் செய் துள்ள–னர்.
இதுகுறித்து பிரபு சிவ–கங்கை நகர் காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.
சிவகங்கை அருகே உள்ள பாகனேரி புதுவிளக்கு பகு–தியைச் சேர்ந்தவர் முருகே–சன். இவரது மனைவி சுமதி. இவர் மதகுபட்டி பகுதியில் உள்ள கல்லூக்கால் கம்பி தயார் செய்யும் தனியார் கம்பெனி–யில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர் கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
இதுபற்றி மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மதகுபட்டி சப்-இன்ஸ்பெக் டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மேலபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மனைவி லட்சுமி. இவர் கடந்த மூன்று மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனும–தித்தனர். நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதா–பமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தவமணி கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.
- பொதுக்கள், பஸ் பயணிகளிடம் போலி டாக்டர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஸ்டீராய்டு கிரீம்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும பக்க விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு.
தஞ்சாவூர்:
இந்திய தோல், பால்வினை மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் 13-வது ஆண்டு கருத்தரங்க மாநாடு கடந்த 11-ந்தேதி தஞ்சை மஹாராஜா மஹாலில் தொடங்கியது. விழாவில் 2-ம் நாளான நேற்று பல்வேறு மருத்துவ தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றன.
விழாவில் நிறைவு நாளான இன்று காலை தோல் மருத்துவத்தில் போலி மருத்துவர்களை களையக்கோரி விழிப்புணர்வு நடைபயணம் (வாக்கத்தான்) நடை பெற்றது.
இதற்கு இந்திய தோல், பால்வினை மருத்துவர்கள் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்க தேசிய தலைவர் டாக்டர் விஜய் ஜவார், கவுரவ பொது செயலாளர் டாக்டர் தினேஷ்குமார் தேவராஜ், மாநில தலைவர் டாக்டர் காளீஸ்வரன், கவுரவ செயலாளர் டாக்டர் அன்னி புளோரா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டு தலைவர் பத்மானந்தன் முன்னிலை வகித்தார். இந்த நடைபயணத்தில் தோல் சம்பந்தமான மருத்துவ பட்டப்படிப்பு படிக்காமல் சில மாத கோர்ஸ் படித்து விட்டு தோல், முடி, நகம் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்களை களைய வேண்டும். இந்த போலி டாக்டர்களிடம் பொது மக்கள் மருத்துவம் பார்க்க கூடாது.
தோல், முடி, நகம் சிகிச்சையை தகுதியான தோல் மருத்துவரிடம் ( எம்.டி. தோல் மருத்துவம், எம்.டி.டி.வி.எல். டி.என்.பி.டி.வி.எல், டி.டி.வி.எல், டி.டி ) மட்டுமே பெற வேண்டும். தோல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மேற்பூச்சு ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஸ்டீராய்டு கிரீம்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும பக்க விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டன.
இந்த நடைபயணமானது மஹாராஜா மகாலில் தொடங்கி புதிய பஸ் நிலை யத்தில் முடிவடைந்தன. அங்கும் பொதுக்கள், பஸ் பயணிகளுக்கு தோல் மருத்துவத்தில் போலி மருத்துவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாநாட்டு தலைவர் டாக்டர் கலைசெல்வன், பொருளாளர் டாக்டர் கோபாலகிருஷ்ண பாண்டியன், அறிவியல் தலைவர் டாக்டர் கவியரசன், டாக்டர்கள் மாணிக்கவாசகம், பிரசாத், ராஜசேகர், ஜீவலட்சுமி, பாண்டியன், பாலசுப்பிர மணியன் உள்பட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று தொடர்ந்து நிறைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றன. பல்வேறு தலைப்புகளின் கீழ் டாக்டர்கள் பேசினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
- நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்க ப்பட்டது தனி சிறப்பாகும்.
இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைல க்காப்பு சாற்றப்ப டுகிறது.
இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதனால் அன்றைய தினம் திருவிழா போல் காட்சியளிக்கும்.
இன்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர்.
பல பக்தர்கள் நேற்று இரவே கோவிலுக்கு வந்து தங்கினர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் நடைபயணமாக வந்தனர்.
நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டன. பக்தர்கள்
நீண்ட வரிசையில்நின்று அம்மனை மனம்உருகி தரிசித்தனர்.
பல்வேறு ஊர்களில் இருந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாவிலக்கு போட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
இன்று மதியம் வரை மாரியம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
இன்று முழுவதும் கணக்கி ட்டால் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுகடங்காத கூட்டம் காணப்படுவதால் ஒழுங்குப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.