என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » home made sweets
நீங்கள் தேடியது "Home Made Sweets"
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை (அ) மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - அரை கிலோ
வறுகடலை - கால் கிலோ
தேங்காய் - 2
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை :
வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.
ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)
அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
ரவை (அ) மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - அரை கிலோ
வறுகடலை - கால் கிலோ
தேங்காய் - 2
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு
செய்முறை :
வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.
ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)
அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
சூப்பரான இனிப்பு சோமாஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த சுவிஸ் ரோலை ஸ்நாகஸாக கொடுத்து அனுப்பலாம். இன்று இந்த சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொடித்த மேரி பிஸ்கெட் - 4 கப்,
சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
பால் - 4 டீஸ்பூன்,
தண்ணீர் - 4 டீஸ்பூன்,
செய்முறை :
ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.
அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.
சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.
சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
பால் - 4 டீஸ்பூன்,
தண்ணீர் - 4 டீஸ்பூன்,
பட்டர் பேப்பர் - தேவைக்கு.
செய்முறை :
ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.
அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.
சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X