search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Homoeopathic college"

    • ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் மட்டுமே அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மழை காரணமாக தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கல்லூரி தற்காலிகமாக விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதை கண்டித்து கடந்த 2 நாட்களாக கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ×