search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "households"

    • குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உதவி தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலமாக வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, பாகூர் தொகுதியில் உள்ள பெண் பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கிடும் நிகழ்ச்சி பாகூரில் உள்ள விஜயவர்த்தினி மகாலில் நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர் தேனீ. ஜெயக்கு மார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக பாகூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகள் 400 பேருக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா,தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமுருகன், விவசாய அணி தலைவர் பாஸ்கர், தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×