என் மலர்
நீங்கள் தேடியது "Ice cream"
- ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
- சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட முடிவு செய்தார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து, அதனை ருசிக்க காத்திருந்த பெண்ணுக்கு சிறிது நேரத்தில் குளு குளு ஐஸ் கிரீம் டெலிவரி செய்யப்பட்டது. கொளுத்தும் வெப்பத்தில் ஐஸ் கிரீம் நம்மை காப்பாற்றிவிடும் என்ற எண்ணத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட துவங்கினார்.

ஐஸ் கிரீம் ருசியில் மெய்மறந்த பெண், அதனை சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது. ஐஸ் கிரீமில் என்ன இருந்துவிட போகிறது என அதை உற்று நோக்கியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் ஆசை ஆசையாய் வாங்கி சுவைத்த ஐஸ் கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது.
அதிர்ச்சியுடன் துரிதமாக செயல்பட்ட பெண், தான் சுவைத்த ஐஸ் கிரீம் உருகுவதற்குள் அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டு, உடனடியாக மலாத் காவல் நிலையம் விரைந்தார். அங்கு தான் ஆர்டர் செய்து சுவைத்த ஐஸ் கிரீமில் கைவிரல் இருந்தது குறித்து புகார் அளித்தார்.
புகாரை எடுத்துக் கொண்ட மலாத் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார்.
- கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்பவர் தனது 5 வயது மகனுக்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.
ஆர்டர் செய்யப்பட்ட அமுல் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீமை திறந்தபோது அதில் பூரான் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்கிரீம் தொகையை திரும்ப அளித்தனர். தீபா தேவி புகார் தொடர்பாக அமுலுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்கிரீமை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் இருப்பது ஐஸ்கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
- ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
மேலும் ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு வழங்கியிருந்த உரிமத்தை ரத்து செய்தனர். சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளர் பூனேவை சேர்ந்த நிறுவனம் என்றும், மத்திய அரசு உரிமம் பெற்று இயங்கி வந்ததாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.
தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
- ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.

அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.
- ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர்.
- விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் இம்மாதம் 14-ந்தேதி ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.
ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஓம்கர் என்பவரின் விரல் தான் அது என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது அவரின் நடுவிரல் துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
- ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விஸ்கி ஐஸ்க்ரீம் விற்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சரத் சந்திரா ரெட்டி என்பவர் நடத்தி வந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.5 கிலோ எடையுடைய 23 விஸ்கி ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகள் வேறு எங்கும் செயல்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐஸ்கிரீம் கலோரிகள் நிறைந்தவை. இவை குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவும்.
- பால் உள்ளிட்டவை, உடலுக்கு தேவையான தினசரி நீர்ச்சத்தை பூர்த்தி செய்கின்றன.
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உண்டாகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.
1. குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். குறிப்பாக குளிர் காலநிலையில் மிகவும் வசதியாக உணர வைக்கும்.
2. ஐஸ்கிரீமின் இனிப்பு சுவை செரோடொனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்துகிறது.
3. ஐஸ்கிரீம் கலோரிகள் நிறைந்தவை. இவை குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவும்.
4. ஐஸ்கிரீமில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் பி12 உள்ளன. இவை குளிர்காலத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
5. இதிலுள்ள பால் உள்ளிட்டவை, உடலுக்கு தேவையான தினசரி நீர்ச்சத்தை பூர்த்தி செய்கின்றன.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தில் பரவும் வீடியோக்கள் சில வரவேற்பையும், சில விமர்சனங்களையும் சந்திக்கும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ ஐஸ்கிரீம் பிரியர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை வயது வித்தியாசம் இன்றி சாப்பிட விரும்பக்கூடியது ஐஸ்கிரீம். அது கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலத்தில் மாலை நேரமாக இருந்தாலும் சரி ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தாலே மகிழ்ச்சி தான். அப்படி ஐஸ்கிரீம் மீது அவ்வளவு ஆசை கொண்ட இளம்பெண் ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் 'ஐஸ்கிரீம் டிராயரை' உருவாக்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அந்த இளம்பெண் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் டப்பாக்களை எடுத்து அதை அனைத்தும் ஒரே டப்பாவில் சேர்த்து கலந்து மீண்டும் அவற்றை பிரிட்ஜில் உள்ள டிரேயில் வைத்து பதப்படுத்தி அதன்பின் அதனை சுவைக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், பொதுவாக ஐஸ் கட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஃப்ரீசர் பெட்டி, ஐஸ்கிரீமை சேமிக்க சிறந்த இடம் அல்ல என்றும் மற்றொருவர், "அதையெல்லாம் யார் சுத்தம் செய்யப் போகிறார்கள்?" என்றும் தெரிவித்தனர்.
- படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார்.
- பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.
தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி ஐஸ் ஒன்றை வாங்கி, கவரை பிரித்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருந்தது.
இதைப் பார்த்தவர் பதறிப் போனார். நல்ல வேளை வாயில் வைத்து சுவைக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அதை படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.
பல ஆயிரம் பேர் கருத்து பகுதியில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். கலவையான கருத்துகளை பதிவிட்டனர். ஐஸ்கிரீம் பிரியர்கள்தான் ஐசுக்குள் பாம்பும் இருக்குமா? என்று உறைந்து போயிருக்கிறார்கள்.
ஹெவி கிரீம் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.
கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!
குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :
வேகவைத்த சேமியா - 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)

செய்முறை :
முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.
அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.
பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.
சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.