search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அன்று மனித விரல்.. இன்று பூரான்.. ஐஸ்கிரீம் ஆர்டர் போட்டது குத்தமா?
    X

    அன்று மனித விரல்.. இன்று பூரான்.. ஐஸ்கிரீம் ஆர்டர் போட்டது குத்தமா?

    • தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார்.
    • கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்பவர் தனது 5 வயது மகனுக்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.

    ஆர்டர் செய்யப்பட்ட அமுல் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீமை திறந்தபோது அதில் பூரான் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்கிரீம் தொகையை திரும்ப அளித்தனர். தீபா தேவி புகார் தொடர்பாக அமுலுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்கிரீமை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் இருப்பது ஐஸ்கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    Next Story
    ×