search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase in passenger numbers"

    • கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சேவையும் இயக்கப்படுகிறது.
    • 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்கள் தேவை என்று பரிந்துரைத்தது.

    சென்னை:

    சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 55 கி.மீ. தூரத்திற்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சேவையும் இயக்கப்படுகிறது.

    அலுவலகப் பணியில் ஈடுபடுவோர், தொழில் சார்ந்தவர்கள் என அனைவரும் தற்போது மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்பி மேற்கொள்கிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில்கள் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. மற்ற வழித்தடங்களில் இயக்கப் படும் ரெயில்கள் 6 முதல் 12 நிமிடங்கள் இடைவெளியில் செல்கின்றன. மெட்ரோ ரெயில் சேவையை இன்னும் அதிகரித்தால்தான் `பீக்' அவர்சில் நெரிசல் இல்லாமல் பயணிக்க முடியும்.

    அதற்கு கூடுதல் ரெயில்கள் வேண்டும் என்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் உறுதி செய்தது. இதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு ஆலோசகரை கொண்டு ஆய்வு நடத்தியது. அதில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக முதல் கட்ட திட்டத்திற்கு 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்கள் தேவை என்று பரிந்துரைத்தது.

    புதிதாக ரெயில்களும், ரெயில் நிலைய வசதிகளையும் மேம்படுத்த ரூ.2,820 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு திட்ட முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டத்துக்கு நிதி அளிக்க சர்வதேச வங்கி ஏற்கனவே வட்டி விகிதத்தை தெரிவித்து உள்ளன.

    இப்போது நிதி ஆயோக் அனுமதி அளித்துள்ளதில் நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அடுத்த மாதம் அனுமதி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய ரெயில்கள் தயாரித்து வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    ×