search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase water inflow"

    • மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
    • இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்திருந்த நிலையில் இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 76.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 24.2, தேக்கடி 21.6, கூடலூர் 2.6, உத்தம பாளையம் 1.4, சண்முகாநதி அணை 2.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×