search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "James Anderson"

    டெஸ்ட் தொடரில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடும் என கிரேம் ஸ்வான் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு காரணம் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பிராட் ஸ்டூவர்ட்டின் ஸ்விங் பந்துதான். இவர்களை எதிர்த்து இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்தால் அது மிகப்பெரிய விஷயம்.

    தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் சாதிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்விங் இல்லை என்றால்தான் இந்தியா சிறப்பாக விளையாடும் என்று முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரோம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்வன் கூறுகையில் ‘‘பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், இங்கிலாந்து ரிவர்ஸ் ஸ்விங்கைதான் நம்பியிருக்க வேண்டும். ஜேம்ஸ் ஆண்டர்சன் புதுப்பந்தில் சிறப்பாக வீசுவதுபோல், பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசுவதில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். அப்போது கோலி 60 முதல் 70 ரன்னில் களத்தில் இருக்கலாம்.



    இங்கிலாந்து கடந்த முறை சிறப்பாக விளையாடுவதற்கு காரணம், ஜேம்ஸ் ஆண்டர்சன் புதுப்பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்தார். இந்தியா மட்டும் புதுப்பந்தில் திணறுவதாக நினைக்கக் கூடாது. ஆண்டர்சன் பந்து ஸ்விங் ஆனால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் இந்தியா கதிதான்.

    பந்து ஸ்விங் ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இல்லை என்றால் அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது மிகவும் சிறப்பான தொடராக இருக்கும்’’ என்றார்.
    தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான முறையில் பந்து வீச்சை தொடங்கியுள்ளார். #ENGvIND #Anderson
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 35 வயதாகும் இவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

    ஓய்விற்குப்பின் நேற்று மீண்டும் களம் இறங்கினார். நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஒருவேளை ஆண்டர்சன் பந்து வீச்சில் திருப்தியில்லை என்றால் அடுத்த வாரம் யார்க்‌ஷைர் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்புள்ளது.



    அதேபோல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் 22-ந்தேதி தொடங்கும் போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.
    இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்டில் விளையாடும் வகையிலான அட்டவணை தயாரிப்பு கேலிக் கூத்தானது என்று ஆண்டர்சன் கூறியுள்ளார். #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஆட்டமும், 8-ந்தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

    ஒருநாள் தொடர் ஜூலை 12-ந்தேதி தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14-ந்தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. 1-ந்தேதி டெஸ்டும், 9-ந்தேதி 2-வது டெஸ்டும், 18-ந்தேதி 3-வது டெஸ்டும், 4-வது டெஸ்ட் 30-ந்தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 9-ந்தேதியும் தொடங்குகிறது.

    ஐந்து டெஸ்டுகளும் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரைக்குள் 42 நாட்களில் நடக்கிறது. இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கடியான நிலையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர் முழுவதும் முழு ஃபிட் உடன் விளையாட வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் கவுன்ட்டி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய தோள்பட்டை காயம் பிரச்சனை இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக் கொள்ள முடியும். நான் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம்.

    42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன ஆழுத்தத்தை கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்படுள்ளது. #jamesAnderson #England
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



    இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார். #jamesAnderson #England
    இந்தியா தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது

    இந்த தொடரில் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 2016-ம் ஆண்டில் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் குணமடைந்தாலும் அவ்வப்போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியா தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதாலும் தொடர் முழுவதும் ஆண்டர்சன் விளையாட வேண்டிய நிலையில் உள்ளார்.

    இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூலை 20-ந்தேதிக்குப் பிறகுதான் பயிற்சிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதுகுறித்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவிற்கு எதிராக ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து 6 வார காலம் இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறோம். பந்து வீச்சாளர்களுக்கு இந்த 6 வாரமும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது வலது கை தோள்பட்டை காயத்தை சரிப்படுத்த வேண்டும். இதனால் இந்தியா தொடருக்கு அவர் தயாராவதற்கு தற்போதில் இருந்து 6 வாரங்கள் ஓய்வில் இருப்பது சரியான வழியாக இருக்கும் என அறிவுரை வழங்கினோம். முதலில் ஓய்வு எடுக்கும் ஆண்டர்சன், மெதுமெதுவாக கிரிக்கெட்டிற்கு திரும்புவார். இந்த காலக்கட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் விட இருந்தார்’’ என்றார்.
    இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஸ்வான், இந்தியாவிற்கு இந்த தொடர் சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கிரேம் ஸ்வான். இவர் இங்கிலாந்து அணிக்காக 60 டெஸ்டில் 255 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது இவர் மற்றும் மோன்டி பெனாசர் ஆகியோரின் பந்து வீச்சால் முதன்முறையாக இந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

    இந்தியா இதற்கு முன் இங்கிலாந்து சென்று விளையாடும்போது 0-4, 1-3 எனத் தொடரை இழந்துள்ளது. ஆனால் ஜூன் மாதம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று ஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘இந்திய அணிக்கு இது சிறந்த தொடராக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் இந்தியா மோசமாக விளையாடியுள்ளது என்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. பாகிஸ்தான் இங்கிலாந்து வந்தபோது, அந்த அணியை விட இந்தியா சிறந்த அணியாக இருந்தது. ஆனால், யாசீர் ஷாவால் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.. ஆனால் பேட்டிங்கில் இந்தியா சிறந்த அணியாக இருக்கிறது.



    கடந்த முறை ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்தியாவை துவம்சம் செய்தனர். அதேபோல் மொயீன் அலி சிறப்பாக பந்து வீசினார். தற்போது, இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட் உள்ளனர். தற்போதும் அவர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் மொயீன் அலி பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால் ஸ்பின்னர் பகுதியில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

    விராட் கோலியை ஆண்டர்சனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில்தான் எல்லாமே உள்ளது. கடந்த முறை விராட் கோலியை தொடர்ச்சியாக வெளியேற்றினார். தற்போது விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். அவர் சிறப்பாக சென்றால், இந்த அணிக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.
    ×