search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery and money stolen"

    • கார்த்திக் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.
    • கார்த்திக் நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் அந்த பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பட்டப்பகலில் கார்த்திக்கின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 9 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கார்த்திக் நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    • சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
    • பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    சரவணம்பட்டி,

    கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (48) கட்டிட காண்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.இந்த நிலையில் அருகில் உள்ள வீட்டுக்காரர் பழனிச்சாமிக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். போனில் வந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி உடனடியாக வீடு திரும்பினார். தனது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்துகிடந்தது.பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×