என் மலர்
நீங்கள் தேடியது "jewelry"
- நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
- நகைகளை பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.
வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.
எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும். நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.
நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது.
அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.
இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.
மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.
- சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 7 ½ பவுன் நகை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், சம்பவத்தன்று சேனைபாளையம் அருகே உள்ள பூவரசன் கோட்டை சுந்தர பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், வையாபுரியை வழிமறித்து கத்தியால் கையில் வெட்டியது. மேலும் வையாபுரி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, 1/2 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.
இதுகுறித்து வையாபுரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- பைக்கில் சென்று நகை பறித்த பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மதுரை
திருமங்கலம், உசிலம்பட்டி, வத்தலகுண்டு சுற்று வட்டாரப் பகுதி களில் கடந்த ஒரு மாதத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. பைக்குகளில் வந்தவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
திருமங்கலம், நரி யம்பட்டி, உத்தப்ப நாயக்கனூர் பகுதிகளில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். விக்கிரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும், வத்தலகுண்டு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா (41), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா (22), நிலக்கோட்டை அருகே உள்ள தும்மலபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தர்மா (24) என்பதும் தெரியவந்தது.
மேற்கண்ட 3 பேைரயும் விக்கிரமங்கலம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
- ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது.
- முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என எந்த நகைகளாக இருந்தாலும் அவற்றை உரிய முறையில் பராமரித்து பாதுகாத்தால் மட்டுமே அவை பல தலைமுறைகளையும் தாண்டி மிகவும் பிரகாசமாகவும், உறுதியாகவும் நம்முடன் பயணம் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தலைமுறைகளைத் தாண்டி பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் நாம் அவற்றை உபயோகப்படுத்தும் காலத்திலேயே அவை பழைய நகைகள் போன்ற தோற்றத்தை தராமல் இருப்பதற்கு அவற்றுக்கு சரியான பராமரிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.
தங்க நகைகள்
தங்கத்தினால் செய்த நகைகளை அன்றாடம் உபயோகப்படுத்தும் பொழுது அவற்றில் நாம் தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் எண்ணை,முகத்திற்கு பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் போன்றவை படிந்து விரைவிலேயே பொலிவிழந்து பழைய நகை போன்ற தோற்றத்தை தரத் துவங்கிவிடும். அழுக்குப் படிந்து பொலிவிழந்து இருக்கும் நகைகளை மாதம் ஒருமுறையாவது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மிக மென்மையான ஷாம்பு கலந்து அதில் ஊறவைத்து மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவலாம்.
அதேபோல் நகைகளை அடிக்கடி சுத்தம் செய்வதும், கடினமான பிரஷ் கொண்டு கழுவுவதும், துணி துவைக்கும் சோப்பை உபயோகப்படுத்தி சுத்தம் செய்வதும் கூடாது.மிகவும் நவீன தோற்றத்துடன் வரும் நகைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு மெல்லிய பருத்தித் துணியில் துடைத்து, ஆறவைத்து பின்பு நகைகளை தனித்தனியாக வைப்பதற்கு என்று இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.
எப்பொழுதும் ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது. நகைகளை சேர்த்து வைக்கும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உரசி தேய்மானத்தை ஏற்படுத்திவிடும்.அதுமட்டுமல்லாமல் அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து அவற்றை எடுக்கும் பொழுது சேதாரத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை ஒரே பெட்டியில் வைக்க நேரிட்டாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மெல்லிய துணிகளில் சுற்றி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.
முத்து நகைகள்
எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது. இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது.முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம்.முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
பவள நகைகள்
இந்த நகைகள் நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப் படியான சூட்டினால் நிறம் மாற வாய்ப்புள்ளது. நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பு கலந்த நீரில் துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம்.
கல் வைத்த நகைகள்
வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.
எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.
நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது. அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.
இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.
மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.
- சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
- டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.
- இந்த டிசைன்கள் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
தங்க நகைகளில் போல்கி வேலைப்பாடு, பச்சிகம் வேலைப்பாடு, மீனாகாரி வேலைப்பாடு,குந்தன் வேலைப்பாடு, ஜாடு வேலைப்பாடு, தந்த வேலைப்பாடு, ஆன்டிக் வேலைப்பாடு மற்றும் டெம்பிள் வேலைப்பாடு என பல வேலைப்பாடுகள் இருந்தாலும் நகாசு வேலைப்பாடு தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. சிக்கலான டிசைன்களை மிகவும் அழகாக நகைகளில் செதுக்கிக் கொண்டுவரும் வேலைப்பாடு நகாசு என்று அழைக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலும் கோவில் வடிவமைப்புகள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவை இடம்பெறுவதைப் பார்க்க முடியும். இவ்வகை நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.இந்த வேலைப்பாட்டில் மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் வடிவங்களை மிகவும் தத்ரூபமாக கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு நகை வடிவமைப்பாளர் செயல்படுகிறார்கள்.
இந்த நகைகளைத் தயாரிப்பதில், ஒவ்வொரு படியும் மிகவும் நுட்பமானதாகக் கூறப்படுகிறது.அதாவது ஓவியம் வரைதல், செதுக்குதல், வேலைப்பாடு செய்தல், பின்னர் வேலைப்பாடு செய்தவற்றை முழுமையாக தாக்கல் செய்தல் போன்ற நான்கு படிகளை இந்த வேலைப்பாடு கொண்டிருக்கின்றது.
முதல் படியாக எந்த டிசைனில் நகை செய்ய வேண்டுமோ அந்த டிசைனை பேப்பர் மற்றும் தங்கத்தாளில் வரைகிறார்கள்.தங்கத் தாளில் வரைந்த பிறகு, முழு வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் தங்கத்தாள் சுத்தியலால் அடிக்கப்படுகிறது (உதாரணமாக தெய்வங்களின் முகக் கோடு, கைகள் மற்றும் கால்களின் வளைவுகள், மாலை, பீடம் போன்ற முக்கிய அலங்காரங்களை தெளிவாக காண்பிக்கும் விதத்தில் சுத்தியலால் அடிக்கப்படுகிறது). தாளை சுத்தியலால் அடித்த பிறகு, அதன் உண்மையான தோற்றம் மற்றும் அதன் மாற்றம் ஆகியவை தோராயமாக தீர்மானிக்கப்படுகின்றது. மிகச்சிறந்த நகை வடிவமைப்பாளரால் மட்டுமே இதுபோன்ற நகாசு வேலைகளை மிகவும் சிறப்பாகவும்,கூர்மையாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் செய்து கொடுக்க முடியும்.
எந்தக் கலையையும் போலவே,இந்தக் கலையிலும் வடிவமைக்கப்படும் முகமானது நகையின் ஆன்மாவை உருவாக்குகிறது. நகாசு வேலைப் பாட்டில் முக அம்சங்களை முடிந்தவரை நன்றாக உருவாக்க வேண்டும் என்பதில் நகை வடிவமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மிகவும் திறமைவாய்ந்த, அனுபவம் நிறைந்த நகை வடிவமைப்பாளர்களால் மட்டுமே இந்த வேலைப்பாட்டை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று கூறப்படுகின்றது. மகிழ்ச்சியான, கூர்மையான மற்றும் அழகான டிசைன்களின் வெளித்தோற்றம் அருமையாக வருவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் முயற்சிதான் நகைகளின் இறுதி மதிப்பை உயர்த்துகின்றது.
நகாசு வேலை முடிவடைந்த பிறகு, அடுத்தபடியாக அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து அகற்றப்படுகின்றன. இவை கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் அவற்றைக் கத்தரிக்கும் பொழுது கவனமாக இல்லையென்றால் சிறிய தவறும் அதிகமாக முயற்சி எடுத்து சிறப்பாக செய்த வேலையை கெடுத்து விடக் கூடியதாக அமைந்து விடும்.
நகாசு வேலை செய்யப்பட்ட பகுதியைத் தவிர அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து எடுக்கப்பட்ட பிறகு வடிவமைக்கப்பட்ட டிசைன் பகுதியின் பின்புறத்தை மூட வேண்டும். இல்லையென்றால் மிகவும் மெல்லிய தங்க தாளில் வடிவமைக்கப்பட்ட டிசைன் வளைந்து நெளிந்து போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.பின்புறம் மூடக்கூடிய தங்கத் தாளின் தடிமன் டிசைன் செய்யப்பட்ட அளவிற்கு ஏற்ப மாறுபடும்.டிசைனின் பின்புறம் மூடுதல் முடிந்ததும், கரடுமுரடான விளிம்புகள் மென்மையாக்கப்பட்டு,இறுதியாக நகைகள் சுத்தம் செய்யப்பட்டு மெருகூட்டப்படும். அதைத் தொடர்ந்து நகைகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க ஒரு சிறப்பான பழங்கால பாலிஷ் உபயோகப் படுத்தப்படுகின்றது.
மிகவும் நுட்பமான இந்த நகாசு வேலைப்பாட்டில் வரும் டாலர்கள் மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.இரண்டு மயில்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பது போல் செய்யப்பட்டிருக்கும் டாலரில் கெம்ப்,வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்து நடுவில் பெரிய சான்ட் ஸ்டோன் வைத்து டாலரின் கீழ்ப்புறத்தில் சிறிய தங்க குண்டுகள் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அபாரமாக இருக்கிறது.
கிருஷ்ண பகவான் குழல் ஊத அவரின் இருபுறமும் கோபியர்கள் நடனமாட பின்புறம் அகன்று விரிந்திருக்கும் மரம் அதனைச் சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதுபோல் செய்யப்பட்டிருக்கும் மனோகரி நகாசு வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருக்கும் டாலரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். மாங்காய் டிசைனின் நடுவில் தாமரை மலரில் அமர்ந்தவாறு லக்ஷ்மி வீற்றிருக்க அதனைச் சுற்றிலும் வண்ணக் கற்களாலான மயில்கள் தோகைகளை தொங்க விட்டது போல் அமர்ந்திருப்பது இந்த வேலைப்பாட்டின் சிறப்பிற்கு மற்றொரு உதாரணம்.
அன்னப்பறவையின் மேல் அம்மன் அமர்ந்திருப்பது போன்றும், லக்ஷ்மியின் பல்வேறு அம்சங்களையும் நகாசு வேலைப் பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். திரிசங்கு ஆபரணம், கஜலட்சுமி நெக்லஸ், தூரிகா நெக்லஸ், கண்டி நகாசு நெக்லஸ், ஊசி நெக்லஸ், ஆதிரா காசு நெக்லஸ், சிந்தூரி கண்டி நெக்லஸ் ,ஸ்வர்ணமுகி நெக்லஸ், லக்ஷ்மி மாங்காய் நெக்லஸ், சந்தியாபரணம் போன்றவை நகாசு வேலைப்பாடுடன் செய்யப்படும் நெக்லஸ்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
கருடன் தோற்றத்தில் வரும் கை விரல் மோதிரம் மற்றும் சாரி பின்களும் நகாசு வேலைப்பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நகாசு வேலைப்பாட்டில் வரும் ஒட்டியாணங்களுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு டிசைன்கள் மிகவும் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
கை வளையல்கள் என்று எடுத்துக்கொண்டால் அன்னப்பறவை, மயில், லட்சுமி, விநாயகர் என அனைத்தையும் மிகவும் அழகாக நகாசு வேலைப் பாட்டில் தங்கத்தில் கற்கள் பதித்து வடிவமைத்திருக்கிறார்கள். இத்தகைய வேலைப்பாட்டுடன் வரக்கூடிய இந்த நகைகளுக்கு முன்னால் வேறு எந்த நகையும் போட்டி போட முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த நகைகளின் வேலைப்பாடு மிகவும் அம்சமாக இருக்கின்றது.
கெம்பு கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள், பச்சை, நீலம் என கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் அருமையான வேலைப்பாட்டுடன் கூடிய நகாசு ஜிமிக்கிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். இவை மட்டுமல்லாது நகாசு வேலைப்பாட்டுடன் வரும் நெக்லஸ்கள், ஹாரங்கள்,வங்கிகள் மற்றும் தலை அலங்கார நகைகளையும் பார்ப்பவர்கள் கட்டாயம் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.
மிகவும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையையும் இது நகாசு வேலை என்று இன்றளவும் மக்கள் குறிப்பிடுவதைப் பார்க்க முடியும்.
- நகைக்கு பதில் பேக்கில் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர்.
- வீட்டிற்கு வந்து பேக்கில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி அமுதா (வயது 65). சம்பவத்தன்று இவர் பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வைரம் நகரில் அவர் சென்றபோது அங்கு இருந்த 2 மர்ம நபர்கள், நகைகளை கழுத்தில் அணிந்து இருக்காதீர்கள். யாராவது திருடி கொண்டு போய் விடுவார்கள்.
எங்களிடம் கழற்றி கொடுங்கள். நாங்கள் பாதுகாப்பாக பேக்கில் வைத்து தருகிறோம் என அமுதாவிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய அமுதா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கழட்டி கொடுத்தார்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் அமுதாவின் கவனத்தை திசை திருப்பி பேக்கில் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பேக்கில் நகைகள் இல்லாததைக் கண்டு அமுதா அதிர்ச்சி அடைந்தார்.
அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து அவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார்.
- அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர், சின்னத்திருப்பதி எம்.ஜி.ஆர். நகரில் தன்னுடைய அண்ணன் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்தார். சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார். அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. ஓடும் பஸ்சில் கோவிந்தம்மாளிடம் யாரோ மர்மநபர், நகையை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும்.
- அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.
தங்கத்தின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆனால், எல்லா காலங்களிலும் தொடர்ந்து தங்க ஆபரணங்களையே பயன்படுத்த முடியுமா? தொடர்ந்து பயன்படுத்துவதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்க வளையல் வளைந்து நெளிந்து தேய்ந்து போகிறது. ஒவ்வொரு முறையும் வளையல் மாற்றும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு கூட்டி கழித்து வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். அதனால், அன்றாட பயன்பாட்டிற்காக பலரும் இப்போது, தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்டட்டுகள் போன்ற செயற்கை நகைகள் பக்கம் திரும்பி விட்டனர்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இவ்வேளையில், பல பெண்களின் விருப்பமாக இருப்பது 1 கிராம் தங்க நகைகள். பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன.
தங்க நகைகள் போலவே பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் கண்களைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த நகைகளுக்குச் சிறந்த மாற்றாகும். இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும். தினசரி அணியக்கூடிய எளிமையான வடிவமைப்பு முதல் மணப்பெண்களுக்கான ஆடம்பரமான டிசைன்கள் வரை, கம்மல், வளையல், செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், கொலுசு என அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.
ஒன் கிராம் கோல்டு என்று விற்கப்படும் நகைகளில் மற்ற உலோகத்தின் மேல் தங்க நிறத்தில் முலாம் பூசி விற்கிறார்கள். சருமத்தின் மேல் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகள் மீது இந்த உலோகம் உரசும் போது ஏற்படும் எதிர்வினையாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். உலோக ஒவ்வாமை இருப்பவர்கள் கூடியவரை செயற்கை நகைகள் அணிவதை தவிர்க்கலாம்.
அப்படியும் விருந்து, விசேஷங்களில், உறவினர் வீடுகளுக்கு செல்ல நேர்கையில் என்று செயற்கை நகைகளை அணிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. இவற்றை கடைபிடித்தால், சருமத்தைப் பாதுகாக்கலாம்.
செயற்கை நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து, காட்டன் உள்ள பெட்டிகளில் காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும்.
தங்கமுலாம் பூசிய நகைகள் அணிந்துள்ள சருமப் பகுதியில் பர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டாம். செயற்கை நகைகளை அணிவதற்கு முன் அவை சருமத்தில் படும் இடங்களில் ஈரம் இல்லாமல், துடைத்து உலர வைத்த பின் அணிவது நல்லது.
- கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
- அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதி சேர்ந்தவர் லட்சுமி. (வயது 90). இவர் தனது மகள் கலா (56) என்பவருடன் வசித்து வருகிறார்.
கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்து வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வீட்டில் கியாஸ் இணைப்பு புத்தகத்தை கொடுத்தால் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லட்சுமி, வீட்டில் இருந்த ஒரு பெட்டியை எடுத்து வந்து அவற்றில் மேற்கண்ட புத்தகங்களை தேடி உள்ளார். அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.
- வாசனை திரவியங்கள் தங்க நகைகளின் பொலிவை குறைக்கக்கூடும்.
தங்க ஆபரணங்களை விரும்பாத பெண்கள் எவருமில்லை. அதன் பொலிவை தக்க வைக்க முறையாக பாராமரிக்க வேண்டும். அழுக்கு, அழகு சாதனப் பொருட்கள், ரசாயனங்கள் உள்பட ஏராளமான அம்சங்கள் தங்கத்தின் பொலிவு குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நேரம் அணிகிறீர்களோ அந்த அளவுக்கு தங்கத்தின் பளபளப்பும், மினுமினுப்பும் குறையக்கூடும்.
வாசனை திரவியங்கள், மாய்ஸ்சுரைசர்கள் கூட தங்க நகைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவற்றின் பொலிவையும் குறைக்கக்கூடும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள் பொலிவை இழக்க தொடங்கும்போது, ஒவ்வொரு முறையும் நகைக்கடைக்கு செல்ல வேண்டும் என்றில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே சுத்தம் செய்துவிடலாம்.
அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளுங்கள். அந்த நீர் அதிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது. இளஞ்சூட்டுடன் இருக்க வேண்டும். அதில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் மென்மை தன்மை கொண்ட டிடர்ஜெண்ட் ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் 'டிஸ்வாஷ்' ஒரு டேபிள்ஸ்பூன் கலக்க வேண்டும்.
இந்த கரைசலில் தங்க நகைகளை ஊற வைக்க வேண்டும். நகைகள் அனைத்தும் நீரில் நன்கு மூழ்கி இருக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்த பிறகு நகைகளை வெளியே எடுத்து, பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிரஷ் மென்மை (சாப்ட்) தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகளின் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அப்போது பிரஷை கொண்டு நகைகளை கடினமாக துடைக்கக்கூடாது. அப்படி செய்தால் நகைகளில் கீறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நகைகளை சுத்தம் செய்வதற்கு ஷாம்புவும் பயன்படுத்தலாம்.
நகைகளை பிரஷ் கொண்டு சுத்தம் செய்து தண்ணீரில் அலசிய பின்னர் டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் மீது வைப்பதை தவிர்க்க வேண்டும். அவையும் நகைகளில் சேதம் ஏற்படுத்தக்கூடும். பருத்தித் துணி மீது நகைகளை உலரவைப்பதுதான் சரியானது. பின்பு பருத்தி துணிகளை கொண்டு நகைகளை துடைத்தெடுத்து விடலாம். நகைகளை அதற்குரிய பெட்டிகளில்தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.
- மர்ம நபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நகையை பறித்தனர்.
- போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58) விவசாயி.
இவரது மனைவி அருள்செல்வி (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல இரவு வீட்டின் கதவை சாத்தி விட்டு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டில் வாசல் கதவு வழியாக வீட்டிற்க்குள் வந்த மர்ம நபர்கள் அருள்செல்வி கழுத்தில் கிடந்த சுமார் 6 பவுன் தங்க நகையை பறித்தனர்.
இதனால் அருள்செல்வி எழுந்து திருடன், திருடன் என சத்தம் போட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர், ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருள்செல்வியின் கழுத்தில் லேசானகாயம் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.