என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Judge Review"
- கமுதி கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
- சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி ஆய்வு செய்தார். நீதிமன்ற அலுவலக கோப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தார். சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார். கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி ஸ்ரீமதி மரக்கன்று நட்டு, பணியாளர்களிடம் தினமும் இந்த மரக்கன்றுக்கு கண்டிப்பாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கமுதி நீதிமன்றத்திற்கான சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கியும், கட்டுமான பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் தலைமை நீதிபதி கவிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி கஜாரர் ஜிஜி, முதுகுளத்தூர் சார்பு நீதிபதி ராஜகுமாரன், பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில், பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, கோயில் வளாகம் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
வரும் 30ம் தேதிக்குள் இதற்கான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி அகோபில மடத்துக்கு சொந்தமான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஆய்வு செய்தார். அப்போது கோயில் வளாகம் பராமரிப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் எச்சரிக்கை அலாரம், ஊழியர்களின் வருகை பதிவேடு, வரவு செலவு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை நேரில் பார்வையிட்டார்.
கோயிலின் முன்பாக உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த நீதிபதி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் சிலரிடம் கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நீதிபதி செல்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 752 திருக்கோயில்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் ஆய்வு செய்துள்ளோம்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பி வைக்க இருக்கிறோம்.
இவ்வறு அவர் கூறினார்.
ஆய்வின் போது தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத், தேவஸ்தான ஊழியர்கள் உடன் இருந்தனர். #VeeraraghavaPerumalTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்