search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakathali"

    • விஜயகுமாருக்கும், சீதா குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் விஜயகுமாருக்கு அதே பகுதியை சேர்ந்த சீதா குமாரி என்பவருடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது .

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விஜயகுமார் தனது கள்ளக்காதலி சீதா குமாரியுடன் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தொரகுடிபாடுவுக்கு வந்தனர்.

    அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விஜயகுமார் பால் வியாபாரம் செய்து வந்தார். பால் வியாபாரத்தில் வரும் பணத்தை விஜயகுமார் தனது மனைவிக்கு அனுப்பி வைத்தார்.

    சீதா குமாரியின் செலவுக்கு சரி வர பணம் தரவில்லை. இதனால் விஜயகுமாருக்கும், சீதா குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு விஜயகுமார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சீதா குமாரி விஜயகுமாரின் கை, கால், கண்ணை கட்டி விட்டு வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரின் மர்ம உறுப்பை அறுத்து வீசி எறிந்தார்.

    மர்ம உறுப்பை அறுக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளருக்கு விஜயகுமாரின் மர்ம உறுப்புகளை அறுக்கும் வீடியோவை அனுப்பி வைத்தார். மேலும் வீட்டின் உரிமையாளருக்கு நடந்த சம்பவங்களை செல்போனில் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சீதா குமாரியை தேடி வருகின்றனர்.

    ×