என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kamarajan birthday celebration
நீங்கள் தேடியது "kamarajan birthday celebration"
திருச்சி தாராநல்லூரில் நாளை காமராஜர் பிறந்த நாள் விழா நடக்கிறது.இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி:
தமிழ்மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட பாரத பெருந்தலைவர் காமராஜர் பேரவை மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை, செக்கடி பஜாரில் நாளை ( 22 ந் தேதி) மாலை 3 மணிக்கு 21-ம் ஆண்டு தொடக்க விழா கல்வி நிதி வழங்கும் விழா, காமராஜர் 116-வது பிறந்த நாள் விழா நடத்துகிறது.
விழாவையொட்டி கல்வி நிதி மற்றும் நோட்டுகள், வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. பேரவை செயலாளர் டி.நாகராஜன் வரவேற்றுப் பேசுகிறார். நிறுவனத் தலைவர் வே.மூர்த்தி தலைமை தாங்குகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா கே.செந்தில்வேல் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், மாரியப்பா ஸ்டோர் பழனிக்குமார் நிதி வழங்குகிறார்கள். விழாவில் த.மா.கா. மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கல்விநிதி, நோட்டுகள், உபகரணங்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கி பேசுகிறார்.
த.மா.கா வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா, நிர்வாகிகள் பி.எல்.ஏ. சிதம்பரம், புலியூர் நாகராஜன், பேரவை நிர்வாகிகள் ராஜாங்கம், ஏசுவடியான், டி.சரவணன், முருகேசன், பழக்கடை சரவணன், எஸ்.ராஜன், ரவி , செல்வமுருகன், விஜய், பிரபாகர், மாரீசன் த.மா.கா. நிர்வாகிகள் கொட்டப்பட்டு சண்முகம், இண்டர்நெட் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், அனந்தராஜா, மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விழாவில் மாநகர மாவட்ட நிர்வாகிகள், கோட்டத் தலைவர்கள் ,வார்டு தலைவர்கள், மற்றும் பல்வேறுஅணியினர், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X