என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala govt"

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான்.
    • ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை.

    வேலூர்:

    தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும், பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

    அதில் ஒன்றுதான் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால் தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் கன்னியாகுமரிக்கு வந்து தடை உத்தரவு போட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதை தான் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர். அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது. அதைக்கூட பார்த்திருக்க மாட்டாரா?. காந்தி பற்றி தெரியாதா?. அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான். ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் கவர்னர்.

    புதிய அணை கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, டி.பி.ஆர். தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். ஆனால் மேகதாது, சிலந்தி ஆறு, முல்லை பெரியாறில் எந்த காரணத்தைக் கொண்டும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றியும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

    ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள், சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம் தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. ஒடிசாவில் எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்கோடு உள்ளனர். அதேபோன்றுதான் ஒரு தமிழர் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.
    • குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

    தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிக அருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசு, இந்திய ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

    குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்! மோகன்தாஸ் - 9344624697 கார்த்திக் - 9080126335 பழனி - 8903289969 தியாகராஜன் - 6382953434

    • முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
    • 600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 29-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர்.

    600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று 5வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

    எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

    இந்நிலையில், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, உடனடியாக ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

    விரைவாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி, வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடும்பங்களில் பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும்.
    • நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவர 400க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன.

    இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

    வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும் என்றும், இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு முன்னதாக வெளியிட்டது.
    • விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.

    மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக, கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.

    இந்த கமிட்டி, கடந்த சில நாட்களாக கேரள திரையுலகில் வெளிவந்த பாலியல் புகார்களை அடுத்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது.

    இந்நிலையில், ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் கேரள அரசு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.

    ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு, முன்னதாக அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    மேலும், ஹேமா கமிட்டி அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

    • ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில், அது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டியை கேரள அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.

    பழம்பெரும் நடிகை மற்றும் ஓய்வுபெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அடங்கிய அந்த கமிட்டியின் முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தங்களின் விசாரணை அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசிடம் ஹேமா கமிட்டி கொடுத்தது.

    ஆனால் அந்த அறிக்கையை அரசு உடனடியாக வெளியிடவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அறிக்கையை அரசு வெளியிட்டது. அதில் சினிமா வாய்ப்புக்காக மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது அம்பலமானது.

    இது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஹேமா கமிட்டியின் முழுமையான விசாரணை அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொத்தம் 3,896 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து 5 நாட்களாக நடந்தது.

    இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அதன்படி ஹேமா கமிட்டியிடம் மிகவும் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் 20 பேரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படுகிறது.

    அவர்களை 10 நாட்களுக்குள் நேரடியாக தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண் என்பதால், அவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    வாக்கு மூலம் அளித்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட நடவடிக்கையை விரும்புவோரின் வாக்குமூலத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வுகுழு தெரிவித்திருக்கிறது.

    எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் விரைவிலேயே விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

    • மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்ல ஏற்பாடு.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.

    தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு தேவசம்போர்டில் இருந்து இத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்?
    • தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்குக் கடத்திக் கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், ஏலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்கைகளில் டன்னு டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

    எல்லைகளைப் பாதுகாக்காமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த அரசின் செயல்கள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு. பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நயத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்? அரசாங்கத்தின் அதிகாரிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இந்த அளவிற்குக் கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.

    இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. இது மிகமிக ஒரு கண்டிக்கத்தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கே அதே குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

    இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையா கண்டிக்கிறோம்.

    • 7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
    • கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இது தொடர்பாக விசாரணை நடத்தியது.

    அப்போது 390 டன் மருத்துவ கழிவுகளை 30 டிரக்குகள் கொண்டு அகற்றியுள்ளதாக கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கேரள வழக்கறிஞரிடம் "7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினர்.

    மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிடில் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் நிறுத்துவதை நிறுத்த வேண்டும்" கேரள அரசுக்கு எச்சரிக்கு விடுத்தனர்.

    மருத்துவ கழிவு கொட்டியது தொடர்பாக எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    குப்பை அகற்றம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் சாய் சத்யஜித் ஆஜரானார்.

    • உச்ச நீதிமன்றத்தில் அணை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்.
    • அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது.

    முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையி்லான அமர்வு விசாரித்தது.

    அப்போது "தமிழக அரசு சார்பில் அணையை பலப்படுத்தும் பணியை செய்ய கேரளா முட்டுக் கட்டையாக உள்ளது. அணையில் எந்த புனரமைப்பு நடவடிக்கை செயல்படுத்தவும் கேரளா தடையாக உள்ளது.

    ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அணை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்" என கோருகின்றனர்.

    மேலும், அணை பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர் என்று எடுத்துரைத்தனர்.

    இதற்கு கேரள தரப்பில் அணை பாதுகாப்பு தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும், நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று வாதிட்டனர்.

    அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தலாம், ஆனால் முதலில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய கேரளா அனுமதிக்க வேண்டும்.

    பேபி அணை பலப்படுத்தல், புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் எடுத்து கூறினர்.

    இதற்கு அணை தங்கள் மாநிலத்தில் உள்ளது, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதே இன்னும் சவாலாக உள்ளது என்று கேரள அரசு சார்பில் வாதிட்டனர்.

    இதையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 142 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரம். அதனை இதற்கு மேல் பேச வேண்டியது இல்லை.

    முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க எந்த பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை.

    மேலும் அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரிக்கலாம்.

    எனவே தற்போது நாங்கள் அறிய விரும்புவது ஒன்று தான், அதாவது ஏற்கனவே அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த முல்லைபெரியாறு அணை கண்காணிப்பு குழு தொடரவேண்டுமா? அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா?

    எனவே இதுதொடர்பாக தமிழகம், கேரளா இரு மாநிலமும் தங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று நீதிபதிகள் கூறினா். பின்னர் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 3வது வாரத்தில் விசாரிக்கலாம் என தள்ளி வைத்தனர்.

    தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை கேரள அரசு ரத்து செய்துள்ளதுடன், இந்த அனுமதியை வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.
    கொச்சி:

    முல்லைப்பெரியாறில் உள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்காக, அந்த அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு கேரள வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து இந்த அனுமதிக்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

    முக ஸ்டாலின்

    ஆனால் இந்த விவகாரம், கேரளாவில் சர்ச்சையாக மாறி இருக்கிறது.

    ஏனென்றால், கேரளாவின் கோரிக்கை முல்லைப்பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பதுதானே தவிர, பேபி அணையை பலப்படுத்துவது அல்ல.

    எனவே இது தொடர்பாக மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

    இதைத்தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை வழங்கிய அனுமதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும் இந்த அனுமதியை வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த உத்தரவு வழக்கத்துக்கு மாறான ஒன்று எனக்கூறியுள்ள வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், இந்த உத்தரவை பிறப்பித்த முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் (வனவிலங்கு) தரப்பில் கடுமையான குறைபாடு உள்ளது எனக்கூறினார்.

    முன்னதாக இந்த பிரச்சினை தொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு அனுமதி அளித்தது பற்றி கேரள அரசுக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒரு நிலைமை என்றால் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில், இந்த முடிவு பற்றி முதல்-மந்திரி அலுவலகத்துக்கோ, நீர்ப்பாசனத்துறை மந்திரி அலுவலகத்துக்கோ அல்லது எனது அலுவலகத்துக்கோ எதுவும் தெரியாது. ஏதோ குளறுபடி நடந்துள்ளது. வெளியான செய்திகளில் இருந்து, மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் மரங்களை வெட்டித்தள்ளத்தொடங்கி விட்டனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளிடம் நாங்கள் அறிக்கை கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×