search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed goats"

    • ஆடுகளை கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டி மேலூரைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது ஆடுகள் பெரியவீரன், சின்னவீரன் என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில் போய் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் குருணை மருந்து வைத்துள்ளனர்.

    அதனை தின்ற 10 ஆடுகள் இறந்து விட்டன. இதுபற்றி அய்யனார் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×