search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife attack"

    பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    பாப்பாரப்பட்டி:

    பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய தம்பி சின்ன கிருஷ்ணன். விவசாயிகள். அண்ணன், தம்பிக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று சின்னகிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படு்கிறது.

    இதனால் அவர் தனது அண்ணன் மனைவிகண்ணம்மாவை (வயது55) திட்டி உள்ளார். இதனை அவரது மகன் முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சின்ன கிருஷ்ணன் அரிவாளால் கண்ணம்மாவைவெட்டினார்.

    இதில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. இந்த மோதலில் சின்ன கிருஷ்ணனின் மகன் விக்னேசுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் கண்ணம்மாள், முனியப்பன், விக்னேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெற்குன்றத்தில் பைக்ரேசில் மோதலில் பெண் உள்பட 3 பேருக்கு அரிவாளால் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    நெற்குன்றம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜாவீத். இவர் இரவு நண்பர் லோகேஷ் உடன் அதே பகுதி முனியப்பா நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் அரிவாள், கத்தி, கம்பியால் ஜாவீத், லோகேஷ் ஆகிய இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்த சுந்தரி என்ற பெண்ணையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

    இதில் சுந்தரிக்கும் லேசான வெட்டு விழுந்தது. தலையில் வெட்டுபட்ட ஜாவீத் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லோகேஷ், சுந்தரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜ், ராஜூ ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதில் அதேபகுதி தனலட்சுமி நகர், அன்னம்மாள் நகர் பகுதி வாலிபர்கள் இடையே தெருக்களுக்குள் பைக் ரேஸ் செல்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திஉள்ளனர். இதுதொடர்பாக நெற்குன்றம் அன்னம்மாள் நகரைச் சேர்ந்த அருண், அய்யனார், மோகன், சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

    7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பலில் ஒருவரை மாணவியின் தந்தை கத்தியால் குத்தினார்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளியில் கூடுதல் விலைக்கு மது விற்ற பார் உரிமையாளருக்கு அவரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி சிறுவாணி மெயின் ரோட்டில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் முதலாவது கடை மகாராணி அவென்யூவில் உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையில் அதே பகுதியை சேர்ந்த பதி என்ற பழம்பதி (வயது 43) என்பவர் பார் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு வழக்கம்போல் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. 10.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பார் உரிமையாளர் பழம்பதியிடம் மதுகேட்டனர். பார் உரிமையாளர் கூடுதல் விலைக்கு மது விற்றதாக கூறப்படுகிறது.

    மதுக்கடையை விட மிக கூடுதல் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பார் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து அறிந்ததும் பார் ஊழியர்கள் அங்கு வந்தனர். பார் உரிமையாளரும், ஊழியர்களும் சேர்ந்த 2 வாலிபர்களையும் தாக்கினர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஒருவரது செல்போனை பறித்து விரட்டி விட்டனர்.

    வேறு இடத்துக்கு சென்ற வாலிபர்களில் ஒருவரிடம் இருந்த செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 3 கார்களில் 15-க்கும் மேற்பட்ட நண்பர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    மதுபாரை மூடிவிட்டு பழம்பதி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மகாராணி அவென்யூ சந்திப்பு அருகே வந்தபோது 3 கார்களில் வந்த நண்பர்களுடன் ஏற்கனவே இருந்த 2 வாலிபர்களும் வழிமறித்தனர்.

    நண்பர்களை தாக்கியது குறித்து கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் பழம்பதியை தாக்கினர். பழம்பதிக்கு அவரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அவர் அலறி சத்தம்போட்டார்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. வெட்டுக்காயங்களுடன் கிடந்த பழம்பதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் வாலிபர்களிடம் இருந்து பறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனையும் பழம்பதி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவற்றை மீட்டு வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    தளி அருகே வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சபீத்பசுமாதிரி (வயது 26), பிரதீப்போரா (32). இவருடைய சகோதரியை தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபீத்பசுமாதிரி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சபீத்பசுமாதிரி, பிரதீப்போரா ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கோட்டரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். தனது தங்கையை அசாமில் விட்டு வந்தது தொடர்பாக பிரதீப்போரா, சபீத்பசுமாதிரியிடம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பிரதீப்போரா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சபீத்பசுமாதிரியை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து ஓடி வந்தனர். இதைப் பார்த்த பிரதீப்போரா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபீத்பசுமாதிரியை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சபீத்பசுமாதிரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரதீப்போராவை வலைவீசி தேடி வருகின்றனர். வடமாநில வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 55). இவர், சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

    அதன் அடிப்படையில் ஏட்டு ஆனந்தனுடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் ரோந்து பணிக்குச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் சின்னக்கட்டளை பகுதியில் சென்றனர்.

    அப்போது அங்கு 2 பேர் போர்வையால் உடலை மூடியபடி நிற்பதை பார்த்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் 2 பேரையும் தனித்தனியாக சப்-இன்ஸ்பெக்டர் மாயன் விசாரித்தார்.

    அந்த நேரத்தில் ஒருவன் திடீரென மாயனின் கழுத்தில் கத்தியால் குத்தினான். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாயன், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவள்ளூர் அருகே வாலிபரை அரிவாள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). விவசாயி. இன்று காலை அவர் புன்னப்பாக்கம் அடுத்த ஈக்காடு கண்டிகை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டு வந்தனர். உடனே மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் இருந்த சுரேசை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டி.வி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக்கேட்ட சித்தியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பார்வதிபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமு, பெயிண்டர். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக லட்சுமி (வயது36) என்ற பெண்ணை  திருமணம் செய்தார். முதல் மனைவி மூலம் ராஜேஷ் உள்ளிட்ட 2 மகன்களும், 2-வது மனைவி லட்சுமி மூலம்  2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். லட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக  வேலைசெய்து வந்தார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி.யில்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்  லட்சுமி செல்போன் அழைப்பு  வந்ததால் டி.வி. சவுண்டை குறைக்கும்படி  ராஜேசிடம் கூறினார். ஆனால் சவுண்டை  குறைக்காமல் ராஜேஷ் பிடிவாதம் செய்தார். 

    இதனால் ரஜேசை மிரட்ட போலீசில் புகார் செய்ய போவதாக  லட்சுமி கூறினார்.  இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த  லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  லட்சுமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த  புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
    அருமனை அருகே பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேரை அரிவாள் வெட்டி அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    அருமனை:

    அருமனை அருகே உள்ள சிதறாலில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதியும் உள்ளது.

    இன்று காலை 6.30 மணி அளவில் சிதறால் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயன் (வயது 49) என்பவர் இந்த பள்ளிக் கூடத்திற்குள் புகுந்தார். அவரது கையில் ஒரு அரிவாளும், வெட்டுக்கத்தியும் இருந்தது. அவர் நேராக மாணவிகள் தங்கும் விடுதிக்கு சென்று அங்கு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தார். மேலும் அங்கு இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார்.

    அப்போது விடுதியில் தங்கி இருந்த திற்பரப்பு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிகள் வர்ஷா, நந்தினி ஆகியோர் இதை பார்த்து பயந்துபோய் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்கள் இருவரையும் ஜெயன் அரிவாளால் வெட்டினார். இதில் அந்த மாணவிகளுக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதனால் மாணவிகள் அலறினார்கள். அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு பள்ளியின் மேலாளர் ஞானமுத்து அங்கு ஓடிச் சென்றார். மேலும் அவர் ஜெயனை தடுக்க முயன்றார். இதனால் அவரையும் ஜெயன் அரிவாளால் வெட்டினார். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பள்ளிக்கூட பஸ்களின் கண்ணாடிகளையும் அவர் உடைத்தார்.

    இதற்கிடையில் பள்ளிக்கூடத்தில் நடந்த அசம்பா விதங்களை அறிந்த அந்த பகுதி மக்கள் பள்ளிக்கூடத்தில் திரண்டனர். மேலும் சுதீர் (50) என்பவர் ஜெயனை பிடிக்க முயற்சி செய்தபோது அவரையும் வெட்டிவிட்டு தப்பிக் முயன்றார். உடனே பொதுமக்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு ஜெயனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு அவரை அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.

    அருமனை போலீசார் ஜெயனை கைது செய்தனர். மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 மாணவிகள் உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த சம்பவம் காரணமாக மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெற்றோரும், பொது மக்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மேலும் அருமனை போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    ஜெயன் எதற்காக பள்ளிக்கூடத்தில் புகுந்து மாணவிகளை வெட்டி தகராறு செய்தார் என்பது பற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயனின் மனைவி அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் 2 பிள்ளைகளும் அந்த பள்ளிக்கூடத்தில் தான் படித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கொல்லிமலையில் முன்விரோதம் காரணமாக பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, பீம நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குப்பபோயன் (வயது 65).

    இவர், அதே ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூசாரியாகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (50) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    குப்பபோயன் கோவிலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருவதால் அவரை மாற்றக்கோரி குப்புசாமியும் (50) இவரது தம்பிகள் ஏழுமலை(45), மணிகண்டன் (40) ஆகியோர் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கின் தீர்ப்பு பூசாரி குப்பபோயனுக்கு சாதகமாக வந்தது. இதனால் குப்புசாமியும், அவரது தம்பிகளும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், அவர்களுக்குள் முன்விரோதம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

    கடும் ஆத்திரத்தில் இருந்த குப்புசாமி மற்றும் அவரது தம்பிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோர் அரிவாளுடன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குப்பபோயன் வீட்டிற்குள் புகுந்தனர்.

    அவர்களை கண்டு குப்பபோயன், அதிர்ச்சி அடைந்தார். பல முறை கூறியபிறகும் கேட்கவில்லை. இனிமேல் உன்னை விட மாட்டோம் என்றபடி குப்பபோயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க குப்பபோயன் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறியபடி ஓடினார். ஆனால் அவரது தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.

    பின்னர் குப்புசாமியும், அவரது தம்பிகளும் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள், ஊர் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகிறார்கள். #tamilnews
    முசிறியில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி விட்டு 2 பேர் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முசிறி அய்யம்பாளையம் கடைவீதியில் ஆனஸ்ட்ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம் மற்றும் தாஸ் ஆகிய 2 பேரும் ஆனஸ்ட்ராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  
    விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #JaganmohanReddy
    நகரி:

    ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 25-ந்தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் சீனிவாஸ் என்பது தெரிந்தது.

    காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியபோது தொண்டர்களை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கத்தியால் குத்திய சீனிவாஸ் பணிபுரியும் ஓட்டலின் உரிமையாளர் அர்‌ஷவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் என்றும் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல அரசு சதி செய்கிறது என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    ஆனால் முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறும்போது, ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கத்திகுத்து சம்பவம் ஒரு நாடகம் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி மீது நடந்த கொலை முயற்சி குறித்து ஆந்திர மாநில அரசு நடத்தும் விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் மூன்றாவது நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரிட் மனுதாக்கல் செய்தனர்.

    மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய். வி.சுப்பாரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள் அனில் குமார், அமர்நாத் ரெட்டி மனுவை தாக்கல் செய்தனர். #JaganmohanReddy
    ×