என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kochadai"
அச்சம்பத்து:
மதுரை கோச்சடை கானை அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 54). தெற்குவாசல் பகுதியில் பால்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று கல்யாணசுந்தரம் பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றார். பின்னர் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார்.
பட்டப்பகலில் வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையில் வைத்திருந்த 31 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை-பணம் கொள்ளை நடந்த பகுதி பரபரப்பான குடியிருப்பு பகுதியாகும். இங்கு பட்டப்பகலில் திருட்டு நடந்திருப்பது அங்கு வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்